சிறுநீரகங்கள் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளாகும். இதயம், நுரையீரல் போல, உடலில் சேரும் கழிவுகளை வெளியேற்ற சிறுநீரகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்த சிறுநீரகங்களைப் பாதுகாக்கவும், அவற்றில் கற்கள் உருவாவதைத் தடுக்கவும் இளநீர் அருந்துவது ஒரு சிறந்த வழியாகும்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்போது, இளநீர் அருந்துவது மிகவும் நன்மை பயக்கும். இது மலச்சிக்கலைப் போக்குவதோடு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் மயக்கம் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற உபாதைகளையும் குணப்படுத்தும். எனவே, கர்ப்பிணிகள் இளநீரைத் தொடர்ந்து அருந்துவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், உடலில் போதுமான அளவு திரவங்களை அருந்துவது சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும். சாதாரண தண்ணீரே போதுமானது என்றாலும், இளநீரும் இதற்கு ஒரு சிறந்த பானமாகும். உடலில் சிறுநீரகக் கற்கள் பொதுவாக கால்சியம் மற்றும் ஆக்ஸலேட் போன்ற கூட்டுப்பொருள்களால் உருவாகின்றன. இவை படிகமாகி சிறுநீரில் கற்களாக மாறுகின்றன.
எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, இளநீர் இந்த படிகங்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதையில் ஒட்டிக்கொள்வதைத் தடுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சிறுநீரில் படிகங்கள் உருவாகும் எண்ணிக்கையையும் இளநீர் குறைக்கிறது. இதுமட்டுமல்லாமல், இளநீர் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளநீரில் உள்ள மெக்னீசியம், நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு இன்சுலின் உணர்திறனை ஊக்குவித்து, நீரிழிவு பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.