MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > ஆன்மிகம் > புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!
ஆன்மிகம்

புனித சலேத் மாதா கோவில்: அற்புத நீரூற்று அதிசயம்!

Admin
Last updated: May 24, 2026 3:52 pm
Admin
Share
SHARE

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவபட்டிபுதூரில் உள்ள புனித சலேத் மாதா திருத்தலத்தில் நடைபெற்ற திருவிழாவில், தேர் பவனிக்கு மத்தியில் திடீரென நீரூற்று தோன்றியது பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில், நவநாள் சிறப்பு வழிபாடு கடந்த 13-ஆம் தேதி தொடங்கி தினமும் மாலை சிறப்பு திருப்பலிகளுடன் நடைபெற்றது. கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நடைபெற்ற மின் தேர் பவனி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் பக்தர்களை வெகுவாக கவர்ந்தன. நேற்று முன்தினம் நடைபெற்ற பெரிய தேர் பவனிக்கு பின்னர், புனித சலேத் மாதா சப்பரத்தை சுற்றி பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்கால் படியிட்டு வழிபட்டனர்.

திருப்பலி முடிந்த சில நிமிடங்களில், திருத்தலத்தின் வடகிழக்கு திசையில் உள்ள பாறை பகுதியிலும், அதே நேரத்தில் கோவிலின் தென்பகுதியிலும் திடீரென நீரூற்றுகள் பொங்கி எழுந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த வேளையில் நிகழ்ந்த இந்த அற்புதம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த செய்தி பரவியதும், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திருத்தலத்திற்கு வந்து நீரூற்றுகளை கண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.

கடந்த மார்ச் 29-ஆம் தேதி முதன்முதலாக சிறிய அளவில் நீரூற்று தோன்றிய நிலையில், கோடை காலத்திலும் வறட்சியிலும் தொடர்ந்து பல இடங்களில் நீரூற்று ஏற்பட்டு வருவது பக்தர்களுக்கு பெரும் வியப்பை அளித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 35 முறைக்கு மேல் திருத்தலத்தைச் சுற்றி நீரூற்று தோன்றியுள்ளது. இதனை அன்னையின் அருளின் அடையாளமாக பக்தர்கள் கருதுகின்றனர். இந்த அதிசய நீரூற்றால், மறவபட்டிபுதூர் புனித சலேத் மாதா திருத்தலம் தற்போது பக்தர்களின் முக்கிய கவனத்தை ஈர்த்து வருகிறது. வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Tamil Nadu Churchesதிருவிழாநீரூற்று அதிசயம்புனித சலேத் மாதாமறவபட்டிபுதூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மின்வெட்டை போக்க போர்க்கால நடவடிக்கை தேவை – பழனிசாமி
Next Article இளநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள்: நோய்களைத் தடுக்கும் அற்புத பானம்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

ஆன்மிகம்

சத்குருவின் தியான செயலி சாட்ஜிபிடியில்: 90 கோடி பேருக்கு இனி மனநல உதவி!

சத்குருவின் 'மிராக்கிள் ஆஃப் மைண்ட்' தியான செயலி, சாட்ஜிபிடி தளத்தில் அறிமுகம்! 90 கோடி பயனர்களுக்கு இனி மனநல உதவிகள் எளிதில் கிடைக்கும்.

2 Min Read
ஆன்மிகம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேர தரிசனம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

1 Min Read
ஆன்மிகம்

வைகாசி அமாவாசை: சாணார்பட்டியில் மகா பிரத்யங்கிரா தேவி யாகம்!

திண்டுக்கல் சாணார்பட்டியில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற மகா பிரத்யங்கிரா தேவி யாகபூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

1 Min Read
ஆன்மிகம்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பால்குடம், அக்னிசட்டி நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?