‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பல்வேறு துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டும் வகையில் சிறப்பு நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த வகையில், கனரா ரோபேகோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்துடன் இணைந்து, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை வலியுறுத்தும் நோக்கில் 'பெண்கள் பலம் வாழ்வாதாரம்' என்ற சிறப்பு நிகழ்வை சென்னையில் வரும் மே 30ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடத்துகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சவேரா ஹோட்டல் சமவேஷ் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில், சேமிப்பில் எவ்வாறு முதலீடு செய்வது, அதன் மூலம் பெண்கள் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகள் வழங்கப்படும். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கோர் பாங்கிங் சேனல் & இன்ஸ்டிடியூஷனல் சேல்ஸ் நேசனல் ஹெட் கே.கோபி நாத் மற்றும் பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் ஆகியோர் பங்கேற்று தங்களது ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
மாலை 4 மணிக்கு தேநீர் விருந்துடன் தொடங்கும் இந்த நிகழ்வில் பங்கேற்பது முற்றிலும் இலவசம். பரஸ்பர நிதியில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள அனைத்து வயதினரும் பங்கேற்று பயனடையலாம். சிறப்பு நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர், கொடுக்கப்பட்டுள்ள கியூஆர் கோடு மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 99440 29700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சி, பெண்களின் நிதி சுதந்திரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீடு மற்றும் சேமிப்பு குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து, தங்கள் வாழ்வாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பாக கருதப்படுகிறது.
