MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கோயில்கள் இனி என் நேரடி பார்வையில்: அமைச்சர் ரமேஷ் உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கோயில்கள் இனி என் நேரடி பார்வையில்: அமைச்சர் ரமேஷ் உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - கோயில்கள் இனி என் நேரடி பார்வையில்: அமைச்சர் ரமேஷ் உறுதி

அரசியல்

கோயில்கள் இனி என் நேரடி பார்வையில்: அமைச்சர் ரமேஷ் உறுதி

Admin
Last updated: மே 23, 2026 2:25 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து சமய அறநிலையத்துறை கோயில்களும் இனி எனது நேரடி கண்காணிப்பில் இருக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி அருகே பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மைக்ரோ மேனேஜ்மென்ட்' முறையை அமல்படுத்தி கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த உள்ளதாக கூறினார்.

'மதச்சார்பற்ற சமூகநீதியே எங்கள் கொள்கை. சாதி, பணம், இனம், மொழி, பாலினம் என எந்த பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்குவதே எங்கள் தலைவரின் வழிகாட்டுதல். தந்தை பெரியார், அம்பேத்கர் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, மக்களுக்கான சேவையை மனதார செய்ய வருபவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது. எங்கள் தலைவர் விஜய்க்கு மக்கள் அளிக்கும் ஆதரவு, அவரை திரையில் பார்க்கும் போது எந்தவித பிரிவினையும் இன்றி இருப்பது போலத்தான், எங்களை போன்றவர்களுக்கும் அமைகிறது. மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ள எங்கள் எண்ணத்தை மட்டுமே பார்க்க வேண்டும்' என அமைச்சர் தெரிவித்தார்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மன அமைதியுடன் சாமி தரிசனம் செய்து செல்ல வேண்டும். கூட்ட நெரிசல் மற்றும் நீண்ட காத்திருப்பு நேரத்தை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கோயில் நிலங்கள் மற்றும் சொத்துக்கள் ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்கப்பட்டு, மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறையில் கீழ்மட்ட ஊழியர்கள் வரை யாரும் ஊழலில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள். 'மைக்ரோ மேனேஜ்மென்ட்' மூலம் அனைத்து கோயில்களும் என் நேரடி பார்வையில் இருக்கும்.

திருக்கோயில்களில் இதுவரை நடந்த முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை ஒரு சிறந்த துறையாக செயல்படும். ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில் பகுதிகளில் உள்ள அடிமனை பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்ய மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோயில்களில் மேம்படுத்தப்படும். சற்று கால அவகாசம் கொடுங்கள், அனைத்தும் நிச்சயம் செய்யப்படும்' என அமைச்சர் எஸ். ரமேஷ் உறுதியளித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu NewsTemple Managementஅமைச்சர் ரமேஷ்அறநிலையத்துறைகோயில்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரகுமான் நடிக்கும் அமானுஷ்ய திகில்! ஜமீனாக வருகிறார்!
Next Article தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி: சீமான் கண்டனம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் முதல்வர் தலைமையில் நடைபெற்ற போதைப்பொருள் அழிப்பு நிகழ்ச்சி

அசாம் முதல்வர்: ரூ.472 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு

அசாம் மாநிலத்தில் ரூ.472 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை காவல் துறையினர் அழித்தனர். போதைப்பொருள்…

ஜூலை 13, 2026

சோனம் வாங்சுக் உடல்நிலை கவலைக்கிடம்: உண்ணாவிரத போராட்டம் தீவிரம்

லடாக்கை 6வது அட்டவணையின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி…

ஜூலை 13, 2026

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர்,…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

You Might Also Like

அரசியல்

நீட் தேர்வு ரத்து கோரி நாளை மாபெரும் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிடர் கழகம் தலைமையில் நாளை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கின்றன.

1 Min Read
அரசியல்

தலித் முதல்வர் ஆக முடியாது – திருமாவளவன் பேச்சு!

தமிழகத்தில் தலித் முதலமைச்சர் ஆவது எளிதல்ல என்றும், திமுக-அதிமுக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இல்லை என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

கோவை சிறுமி கொடூரம்: அதிமுக கண்டனம், அரசுக்கு இபிஎஸ் கடும் எச்சரிக்கை!

கோவை சிறுமி கொலை சம்பவத்தில் காவல்துறை துரிதமாக செயல்படவில்லை என்றும், அரசின் அலட்சியத்தால் சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

1 Min Read
அரசியல்

அதிமுக மனுக்கள் மீது நாளை அறிவிப்பு – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

அதிமுகவில் இரு பிரிவுகளாக இருந்த உறுப்பினர்கள் அளித்த மனுக்கள் குறித்து நாளை காலை அறிவிப்பு வெளியாகும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். மனுக்களை வாபஸ் பெறுவதாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?