நாட்டார் மர்மக்கதை பின்னணியில் உருவாகும் புதிய படத்தில் பிரபல நடிகர் ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'விழா' படத்தை இயக்கிய பாரதி பாலகுமாரன் இந்த படத்தை இயக்குகிறார். இது 1980-களில் நடக்கும் கதை.
இந்த படத்தில் ரகுமான் ஒரு ஜமீன்தாராக நடிக்கிறார். தனது குடும்பத்தை அமானுஷ்ய சக்திகளிடம் இருந்து காக்க போராடும் ஒரு ஜமீன்தாராக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
'சாம்பியன்' விஷ்வா, மைம் கோபி, ஆதலசம் நரேன், ரிஷா ஜேக்கப்ஸ், முனீஷ்காந்த், அனுபமா குமார், பாபா பாஸ்கர், ரம்யா சுரேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். கோமளா ஹரி பிக்சர்ஸ் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
அமானுஷ்ய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஜமீன்தார் கதாபாத்திரத்தில் ரகுமான் நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த திகில் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.