MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழகத்தில் இரவு மின்வெட்டு: மக்கள் போராட்டம், அமைச்சர் ஆலோசனை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழகத்தில் இரவு மின்வெட்டு: மக்கள் போராட்டம், அமைச்சர் ஆலோசனை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழகத்தில் இரவு மின்வெட்டு: மக்கள் போராட்டம், அமைச்சர் ஆலோசனை!

தமிழ்நாடு

தமிழகத்தில் இரவு மின்வெட்டு: மக்கள் போராட்டம், அமைச்சர் ஆலோசனை!

Admin
Last updated: மே 23, 2026 1:26 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகி வருவதால், சாலைகளில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இரவிலும் தொடரும் மின்வெட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இரவில் நிம்மதியாக உறங்க முடியாமல் குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்ற நிச்சயமற்ற நிலை, மறுநாள் பணிக்கு செல்பவர்களிடையே மன உளைச்சலை அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர, தமிழகத்தின் பல பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் தொடர்கின்றன. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. மின்வாரிய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், அதிகாரிகளிடமிருந்து முறையான பதில் கிடைப்பதில்லை என்றும், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே சென்னை பெரம்பூர், ராயபுரம், அம்பத்தூர், ஆவடி போன்ற பகுதிகளிலும், கொளத்தூர், வில்லிவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் போன்ற பல இடங்களிலும் பல மணி நேர மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கொளத்தூர் பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டதால், மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்ற போராட்டங்கள் பல இடங்களில் தொடர்கின்றன.

தண்டையார்பேட்டையில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை சிறைபிடித்த சம்பவமும் அரங்கேறியது. கடந்த 2 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிப்பதாகவும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி மக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு பிரச்சனைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Public ProtestTamil Nadu Power CutTN Electricityஅமைச்சர் ஆலோசனைசென்னைமின்வெட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சூரியக் கட்சி: கருத்து கேட்பு கூட்டமா? சம்பிரதாயமா? – தொண்டர்கள் குமுறல்!
Next Article 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு குறித்த செய்தி

52 வயதில் செயற்கை கருத்தரிப்பு: குழந்தை பெற்ற பெண் – மருத்துவமனைக்கு உத்தரவு

52 வயதான பெண் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற அனுமதி கோரிய…

ஜூலை 17, 2026

எரிபொருள் நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை: பிரதமர் மோடி

மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிபொருள் விநியோக…

ஜூலை 17, 2026

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 3 வயது…

ஜூலை 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோத்தகிரியில் சிட்டுக்குருவிகள் அதிகரிப்பு: பறவை ஆர்வலர்கள் மகிழ்ச்சி

கோத்தகிரி பகுதியில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது பறவை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் முன்ஜாமீன் நிபந்தனைகள்

தவெக எம்.எல்.ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு. காவல் நிலையத்தில் ஆஜராகாத நிலையில், கடிதம் மூலம் விளக்கம் கோரியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

ஊட்டியில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை: வளர்ப்பு நாய் பலி – அச்சத்தில் பொதுமக்கள்

ஊட்டியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த சிறுத்தை, வளர்ப்பு நாயை கொடூரமாக வேட்டையாடியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு: நயினார் நாகேந்திரன் கண்டனம்

விளம்பர மோகத்தால் மக்கள் பணத்தை வீணடிக்கும் விஜய் அரசு! 300 பேருந்துகளின் ட்ரோன் ஷாட் எடுப்பதற்காக ₹1 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?