MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: போஜ்சாலா தீர்ப்பு: வாராணசி, மதுரா வழக்குகளில் தாக்கமென்ன?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: போஜ்சாலா தீர்ப்பு: வாராணசி, மதுரா வழக்குகளில் தாக்கமென்ன?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - போஜ்சாலா தீர்ப்பு: வாராணசி, மதுரா வழக்குகளில் தாக்கமென்ன?

இந்தியா

போஜ்சாலா தீர்ப்பு: வாராணசி, மதுரா வழக்குகளில் தாக்கமென்ன?

Admin
Last updated: மே 18, 2026 8:59 காலை
Admin
Share
SHARE

மத்திய பிரதேசத்தின் தார் நகரில் உள்ள போஜ்சாலா வளாகம், சரஸ்வதி தேவி கோயில் தான் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை ஏற்கப் போவதில்லை என்றும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் முஸ்லிம் தரப்பினர் அறிவித்துள்ளனர். அயோத்தி விவகாரத்திற்குப் பிறகு, இதுபோன்ற தீர்ப்புகள் பிற வழக்குகளிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் மசூதி-கோயில் சர்ச்சை தொடர்பாக 10 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்குகளில் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 6 வழக்குகள் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் உள்ளன. மேலும், மத்திய பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு வழக்கு உள்ளது. தற்போது வெளியாகியுள்ள போஜ்சாலா தீர்ப்பு, இந்தியாவின் எதிர்காலம் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில், அயோத்தி பாபர் மசூதி – ராமர் கோயில் வழக்கால் நாடு முழுவதும் பல கலவரங்கள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதையடுத்து, காங்கிரஸ் ஆட்சியில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் ஆட்சியில் 'வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991' இயற்றப்பட்டது. இதன் படி, நாடு சுதந்திரம் அடைந்த நாளில் வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அவற்றில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்றும், அவற்றின் மீது வழக்குத் தொடர முடியாது என்றும் கூறப்பட்டது. ராமர் கோயில் மீதான வழக்கின் தீர்ப்பு 2019-ல் வெளியாவதற்கு முன்பாகவே, இந்தச் சட்டத்தை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் உள்ளது.

எனினும், ராமர் கோயில் தீர்ப்புக்குப் பிறகு நிலைமை மெல்ல மாறி வருகிறது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வாராணசி கியான்வாபி மசூதி வழக்கு மற்றும் மதுரா ஷாயி ஈத்கா மசூதி வழக்குகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன. நாடு முழுவதும் சுமார் 1,800 மசூதிகளும், இஸ்லாமியக் கட்டிடங்களும் பண்டைய கோயில்களை இடித்த பின்னரே கட்டப்பட்டதாகப் புகார் உள்ளது. இதில் உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக 299 புகார்கள் உள்ளன. இதுபோல் கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புகார்கள் உள்ளன. வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம் 1991-ல் இயற்றப்பட்டபோது, அயோத்தி வழக்குக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற அனைத்து வழிபாட்டுத் தலங்களின் நிலைமை 1947 ஆகஸ்ட் 15ம் தேதி நிலவரப்படியே தொடர வேண்டும் என்று அந்தச் சட்டம் வலியுறுத்தியது. இதன் மூலம், பண்டைய கோயில்கள் தங்களுக்குச் சொந்தமானவை என்று கோருவதற்கான உரிமையை இந்து தரப்பு இழந்தது. அந்தச் சட்டத்தில் அயோத்தி வழக்கைப் போலவே காசி, மதுரா வழக்குகளையும் விலக்குகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடந்தபோது பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அன்று அந்தச் சட்டத்தை எதிர்த்த பாஜக, இன்று காசி, மதுரா போன்ற வழக்குகளுக்காக அந்தச் சட்டத்தை ரத்து செய்யுமா என்ற கேள்விக்கும் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Bhojshala Templeகோயில் வழக்குகள்போஜ்சாலாமதுராவழிபாட்டு தலங்கள்வாராணசி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்
Next Article ஊர்க்காவல் படையினருக்கு பணி நிரந்தரம்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெள்ள நிவாரணத்திற்காக நன்கொடை வழங்குகின்றனர்

அசாம் எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளம் வெள்ள நிவாரணத்திற்கு நன்கொடை

அசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஒரு கட்சி தவிர அனைத்து எம்.எல்.ஏ.க்களும்…

ஜூலை 28, 2026

நீட் வினாத்தாள் கசிவு: மத்திய அரசை சாடிய அகிலேஷ் யாதவ்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மத்திய…

ஜூலை 28, 2026

மாணவிகள் போல இல்லை, சாக்கடை போன்றவர்கள்: ஜென் சி தலைமுறையினரை விமர்சித்த கங்கனா ரணாவத்

பாஜக எம்பியும், நடிகையுமான கங்கனா ரணாவத், ஜென்…

ஜூலை 28, 2026

தானே மாவட்டத்தில் கனமழை: 18 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட…

ஜூலை 28, 2026

நீட் போராட்டக்காரர்கள் விடுதலை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 18…

ஜூலை 28, 2026

You Might Also Like

இந்தியா

பிரதமர் அறிவுரை மீறல்: பாஜக பிரமுகருக்கு முதல்வர் அதிரடி நோட்டீஸ்!

பிரதமர் மோடியின் எரிசக்தி சிக்கன வேண்டுகோளை மீறி மத்தியப் பிரதேசத்தில் பாஜக பிரமுகர் நடத்திய வாகன ஊர்வலம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் மோகன் யாதவ் விளக்கம்…

2 Min Read
ராகுல் காந்தி பாஜக அரசை அகற்றுவது குறித்து பேசுகிறார்
இந்தியா

பாஜக அரசை அகற்றும் நேரம் வந்துவிட்டது – ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 Min Read
புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் புதிய எம்.டி.எஸ் படிப்புகள் தொடக்கம்
இந்தியா

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 2 புதிய எம்.டி.எஸ் படிப்புகள்

புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இந்த கல்வியாண்டு முதல் இரண்டு புதிய எம்.டி.எஸ். படிப்புகள் தொடங்கப்பட உள்ளன. இதுகுறித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

2 Min Read
மிஸ் யூனிவர்ஸ் இந்தியா மணிகா விஸ்வகர்மா
இந்தியா

மாணவர் போராட்டம் நீதிக்கானது – மணிகா விஸ்வகர்மா

‘மிஸ் யூனிவர்ஸ் இந்தியா’ மணிகா விஸ்வகர்மா, மாணவர்களின் போராட்டங்கள் நீதிக்கான கோரிக்கைகள் என்றும், பிரதமர் மோடியிடமிருந்து பதில் தாமதமாக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?