புதிய வாரத்திற்கான ராசிபலன்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிம்ம ராசிக்காரர்களுக்கு தடைகளும் தாமதங்களும் அகலும் வாரமாக இது அமையும். ராசி அதிபதி சூரியன், லாப ஸ்தான அதிபதி புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மன நிம்மதியும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தைரியம் பெருகும், ஞாபக சக்தி மேம்படும். உடன் பிறந்தவர்கள் மற்றும் நண்பர்களின் உதவி பக்கபலமாக இருக்கும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும். நீண்ட நாட்களாக நிறைவேற்ற முடியாமல் தடைபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். உயர்கல்வி, ஆராய்ச்சி கல்வி படிக்க நல்ல வாய்ப்புகள் உண்டாகும். புத்திர பாக்கியம் ஏற்படும். குடும்ப சூழல், ஆரோக்கியம் காரணமாக கல்வியில் ஏற்பட்ட தடைகள் அகலும். முன்னோர்களின் பரம்பரை வியாதியான கை, கால் வலி, சுகர், பிரஷர் போன்றவைகள் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளது. வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். பெண்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் வழங்கலாம்.
கன்னி ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும் வாரமாக இது இருக்கும். ராசி அதிபதி புதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பாதை தெளிவாகத் தெரியும். ஆன்ம பலம் பெருகும், மனதில் திடமான சிந்தனைகள் தோன்றும். புகழ், அந்தஸ்து, கவுரவம், செல்வம், செல்வாக்கு என அனைத்து சாதகமான பலன்களும் நடக்கும். வேற்று இனத்தவரின் ஆதரவு கிடைக்கும். பண வரவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பேச்சை மூலதனமாக கொண்டவர்கள் தொழிலில் சாதனை படைப்பார்கள். சிலர் தொழிலை ஒரு ஊரில் இருந்து வேறு ஊருக்கு மாற்றும் எண்ணம் ஏற்படலாம். அரசாங்க வேலைக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். வீடு, வாகன யோகம் சிறப்பாக அமையும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். புதன்கிழமை பாசிப்பருப்பு பாயாசம் தானம் வழங்கலாம்.
துலாம் ராசிக்காரர்கள் சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம் இது. ராசிக்கும் ராசி அதிபதி சுக்கிரனுக்கும் செவ்வாயின் பார்வை உள்ளது. பூர்வீகம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். முன்னோர் சொத்துக்களை பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடு மறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். வேலை இழப்பு, ஊதியக் குறைப்பு, அதிக வேலை போன்ற காரணங்களால் அதிருப்தி ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் சாதகமாக இல்லாததால், சுய ஜாதக நேரம் அறிந்து தொழில் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். 15.6.2026 அன்று காலை 8.41 வரை சந்திராஷ்டமம் இருப்பதால், அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். தொலைதூர பயணங்களை தவிர்க்க வேண்டும். வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் தானம் வழங்கலாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம் இது. ராசி அதிபதி செவ்வாயின் பார்வை மற்றும் உச்ச குருவின் பார்வை ராசிக்கு கிடைப்பதால் இது விபரீத ராஜயோக அமைப்பாகும். சிலருக்கு மனைவி மூலம் அதிர்ஷ்ட பணம், சொத்து கிடைக்கும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம். சிலர் வாகனத்தை மாற்றலாம். குடும்ப உறவுகளிடம் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். திருமண தடை அகலும். குழந்தை பேறு உண்டாகும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் சமன்படும். ஆன்லைன் வர்த்தகர்களின் வாழ்வாதாரம் உயரும். 15.6.2026 அன்று காலை 8.41 முதல் 17.6.2026 அன்று காலை 8.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால், தொழில் உத்தியோகம் சம்பந்தமான பய உணர்வு அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்குவாதங்களை குறைத்தால் பெரிய பிரச்சனைகள் வராது. செவ்வாய்க்கிழமை பருப்பு சாதம் தானம் வழங்கலாம்.