MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 5 போட்டிகள் முதல் ஆயுள்தடை வரை தண்டனை?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 5 போட்டிகள் முதல் ஆயுள்தடை வரை தண்டனை?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 5 போட்டிகள் முதல் ஆயுள்தடை வரை தண்டனை?

விளையாட்டு

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு 5 போட்டிகள் முதல் ஆயுள்தடை வரை தண்டனை?

Sri Prem Kumar R
Last updated: ஆகஸ்ட் 23, 2026 2:23 மணி
Sri Prem Kumar R
Share
இந்திய கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மைதானத்தில் இலங்கை வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி
மைதானத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்
SHARE

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது, இலங்கை வீரர் அசிதா பெர்னாண்டோவுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு, 5 டெஸ்ட் போட்டிகள் முதல் ஆயுள் காலம் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது டெஸ்டின் முதல் நாளில், 17வது ஓவரின் கடைசி பந்தில் அசிதா பெர்னாண்டோ வீசிய பந்தில் ஜெய்ஸ்வால் 45 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். விக்கெட் வீழ்ந்தபோது இரு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்து ஒருவரையொருவர் முட்டிக்கொள்ளும் அளவுக்கு சென்றது. சக வீரர் தேவ்தத் படிக்கல் சமாதானப்படுத்த முயன்றும், ஜெய்ஸ்வால் கட்டுக்கடங்காமல் பெர்னாண்டோவை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றார். இதனால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சர்வதேச போட்டிகளின் போது சக வீரரைத் தாக்குவது அல்லது வன்முறையில் ஈடுபடுவது ஐசிசி விதிமுறைகளின் கீழ் லெவல் 4 குற்றமாகக் கருதப்படுகிறது. ஐசிசி நடத்தை விதிகளின் கீழ் மிகவும் கடுமையான குற்றங்களாக இவை கருதப்படுகின்றன. நடுவர்கள், போட்டி நடுவர் அல்லது சக வீரர்களைத் தாக்குவது போன்ற செயல்களுக்குக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும்.

ஐசிசி நடத்தை விதிமுறைகளின் பிரிவு 2.18 மற்றும் 2.19 இன் படி, மைதானத்தில் வன்முறையில் ஈடுபடும் வீரருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். இதன் கீழ், குறைந்தபட்சம் 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம். குற்றத்தின் தீவிரத்தைப் பொறுத்து ஆயுட்காலத் தடை வரை விதிக்கவும் ஐசிசி விதிகளில் இடம் உள்ளது.

ஜெய்ஸ்வால் இதுபோன்ற ஒழுங்கீனச் செயலில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. கடந்த 2022 துலீப் கோப்பை இறுதிப் போட்டியின் போது, ​​தெற்கு மண்டல வீரர் ரவி தேஜாவுடன் ஜெய்ஸ்வால் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டார். அப்போது நடுவர்கள் எச்சரித்தும் அவர் கேட்காததால், மேற்கு மண்டல கேப்டன் அஜின்கியா ரஹானே தலையிட்டு ஜெய்ஸ்வாலை மைதானத்தில் இருந்து வெளியேற்றினார்.

அப்போது போட்டி நடுவர் ஜெய்ஸ்வாலுக்கு 4 போட்டிகள் தடை விதிக்கத் தயாராக இருந்தார். ஆனால் ரஹானே தனது சக வீரரைக் கண்டித்ததை அடுத்து அந்தத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. அந்தப் போட்டியில் ஜெய்ஸ்வால் 265 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். பின்னர் 2023 இல் அவர் இந்திய அணியிலும் அறிமுகமானார்.

தற்போது மீண்டும் மைதானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டதால் ஜெய்ஸ்வாலுக்கு தண்டனை வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அவரை சீண்டிய இலங்கை வீரருக்கும் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மோதல் ஐசிசி விதிமுறைகளின்படி விசாரிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் ஜெய்ஸ்வால் மற்றும் பெர்னாண்டோ இருவருக்கும் தண்டனை விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Asitha FernandoCricket MatchICC RulesYashasvi Jaiswalஅசிதா பெர்னாண்டோஇந்தியா இலங்கை கிரிக்கெட்ஐசிசி விதிமுறைகள்கிரிக்கெட் போட்டியஷஸ்வி ஜெய்ஸ்வால்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சமையல் எரிவாயு சிலிண்டரில் அச்சிடப்பட்டுள்ள சோதனை குறியீடுகள் சிலிண்டரில் ‘ஏ, பி, சி, டி’ குறியீடு: இது சாதாரண விஷயம் அல்ல!
Next Article ரயிலில் ஏற்றப்பட்ட ஆட்டோ ரிக்ஷா ஆட்டோவை ரெயிலில் ஏற்றி சொந்த ஊர் சென்றதாக பரவும் வீடியோ: ரயில்வே விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சித் தலைவர் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்

மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்யுமா? காங்கிரஸ் கேள்வி

பாராளுமன்றக் கூட்டத் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் அதிகாரப்பூர்வமாக முடித்து…

ஆகஸ்ட் 23, 2026

வாடிக்கையாளரை உருவ கேலி செய்த காபி நிறுவனம்: மன்னிப்பு கோரிய SUBKO

பெங்களூரு SUBKO காபி நிறுவனம், வாடிக்கையாளரை ரசீதில்…

ஆகஸ்ட் 23, 2026

சீனா செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்: எல்லைப் பிரச்சினை விவாதம்

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில், தேசிய…

ஆகஸ்ட் 23, 2026

ராகுலின் மாணவர் குரல் நிகழ்ச்சி: பாஜக நிலைகுலைந்ததாக காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் ராகுல் காந்தி நடத்திய மாணவர் கலந்துரையாடலை…

ஆகஸ்ட் 23, 2026

பா.ஜ.க.வில் ஜென்சி தலைமுறையினருக்காக சிறப்பு அணி: முக்கிய நிர்வாகிகள் நியமனம்

இளம் தலைமுறையினரை ஈர்க்கும் நோக்கில் பா.ஜ.க.வில் 'ஜென்சி'…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும் காட்சி
விளையாட்டு

ரிஷப் பண்ட் சாதனை: ஜாக் காலிஸ் ரெக்கார்டை முறியடித்தார்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸர் மூலம் ஜாக் காலிஸின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை முறியடித்தார். மேலும் கிறிஸ்…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ்
விளையாட்டு

குல்தீப் யாதவ் புறக்கணிப்பு: மனமுடைந்த வீரர், பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்பட்டது குறித்துப் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. மனமுடைந்த வீரர் பயிற்சிக்கு வரவில்லை என்றும், பயிற்சியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2 Min Read
விளையாட்டு

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர்: பிசிசிஐ அறிவிப்பு

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஒப்புதலை பிசிசிஐ வழங்கியுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டன் பதவியையும் அணியையும் இழக்கிறார்.

2 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர்
விளையாட்டு

இந்தியா vs ஜிம்பாப்வே 2வது டி20: யாஷ் தாக்கூர் அறிமுகம்!

இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சு தேர்வு. இந்திய அணியில் யாஷ் தாக்கூர் அறிமுகம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?