MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: இயற்கை உபாதைக்காக பஸ் ஜன்னலை உடைத்த பெண்: போக்குவரத்து கழகத்திற்கு ரூ.28,000 இழப்பீடு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - இயற்கை உபாதைக்காக பஸ் ஜன்னலை உடைத்த பெண்: போக்குவரத்து கழகத்திற்கு ரூ.28,000 இழப்பீடு!

தமிழ்நாடு

இயற்கை உபாதைக்காக பஸ் ஜன்னலை உடைத்த பெண்: போக்குவரத்து கழகத்திற்கு ரூ.28,000 இழப்பீடு!

Admin
Last updated: மே 18, 2026 12:02 மணி
Admin
Share
SHARE

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த பெண், இயற்கை உபாதை காரணமாக பேருந்தை நிறுத்தக் கோரியுள்ளார். ஆனால், பேருந்தின் நடத்துனரும், ஓட்டுநரும் மறுத்ததால், கோபமடைந்த அந்தப் பெண், பேருந்தின் ஜன்னல் கண்ணாடியை சுத்தியலால் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காவு பகுதியில் அரசு பேருந்தில் பயணித்த பெண், தான் இறங்க வேண்டிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பேருந்தை நிறுத்தும்படி நடத்துனரிடம் கேட்டுள்ளார். ஆனால், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லை என்பதால் நடத்துனர் மறுத்துவிட்டார். தொடர்ந்து, ஓட்டுநரிடமும் இதே கோரிக்கையை முன்வைத்தும் அவர் நிறுத்தாமல் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், நடத்துநர் மற்றும் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவர்களை தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், பேருந்தில் அவசரகால பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த சுத்தியலை எடுத்த அந்தப் பெண், ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், நடத்துனர் மற்றும் சக பயணிகள் உடனடியாக பேருந்து பணிமனைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் கசபா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தியதில், அந்தப் பெண், 'ஆத்திரத்தை அடக்கலாம், ஆனால் இயற்கை உபாதையை அடக்க முடியாது. கழிவறைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தான் பேருந்தை நிறுத்தக் கோரினேன். ஆனால், யாரும் கேட்கவில்லை. வேறு வழியின்றி ஜன்னலை உடைத்தேன். இதற்காக நான் மன்னிப்புக் கோருகிறேன். சேதமடைந்த கண்ணாடிக்கான இழப்பீட்டுத் தொகையையும் செலுத்துகிறேன்' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, போக்குவரத்து கழகத்திற்கு ரூ.28,000 இழப்பீட்டுத் தொகையாகப் பெற்றுக்கொண்டு, அந்தப் பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Kerala NewsRoad AccidentWoman Powerகேரளா செய்திகள்பெண் தைரியம்பேருந்து விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்!
Next Article திமுக கூட்டணியில் தொடர்கிறோம் – திருமாவளவன் விளக்கம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியருக்கு சாகும்வரை சிறை

வகுப்பறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கு சாகும்வரை சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவு…

1 Min Read
தமிழ்நாடு

வாட்ஸ்அப் பயனர்களே உஷார்: மால்வேர் தாக்குதல் எச்சரிக்கை

வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களை குறிவைத்து பெரிய அளவிலான மால்வேர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக CERT-In எச்சரித்துள்ளது. .vbs கோப்புகளை திறந்தால் சாதனத்தின் கட்டுப்பாடு பறிபோவதுடன்,…

1 Min Read
தமிழ்நாடு

நாகர்கோவில்: கட்டிலில் இருந்து தவறி விழுந்த 8 வயது சிறுவன் சாவு

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பெருமாள்புரம் என்.ஜி.ஓ காலனி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் சிலுவைக்கண். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கீசர்பெர்ல்…

1 Min Read
தமிழ்நாடு

பிரதமர் மோடி அரசின் 12 ஆண்டு கால சாதனைகள்: எல்.முருகன்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 12 ஆண்டுகளில் 15.7 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?