MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!

தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொடூரமாக கொன்ற மனைவி!

Admin
Last updated: ஜூலை 8, 2026 3:00 மணி
Admin
Share
கொலை செய்யப்பட்ட பிரசாந்த் மற்றும் அவரது மனைவி சந்தியா, கள்ளக்காதலன் அனில் தொடர்பான செய்தி
மனைவி மற்றும் கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட கணவன்
SHARE

கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருக்க முடியாது என்ற கொடூர எண்ணத்துடன், மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் நிஜாமாபாத் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (35) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருடைய மனைவி சந்தியா (30) தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். பிரசாந்த் வெளிநாட்டில் இருந்த சமயத்தில், சந்தியாவுக்கு அதே பகுதியை சேர்ந்த அனில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் வெளிநாட்டில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சந்தியா, தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிரசாந்த் திடீரென சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது மனைவியின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்ட பிரசாந்த், அவர் வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். உடனடியாக மனைவியை கண்டித்து, கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் சந்தியா தனது கள்ளக்காதலனை சந்திப்பதை நிறுத்தவில்லை. தனது கள்ளக்காதலுக்கு கணவர் இடையூறாக இருப்பதாக சந்தியா நினைத்துள்ளார். இது குறித்து தனது கள்ளக்காதலன் அனிலிடம் கூறியுள்ளார்.

இருவரும் சேர்ந்து பிரசாந்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக அனில், அதே பகுதியை சேர்ந்த வெங்கட் சாய் என்பவரின் உதவியை நாடியுள்ளார். திட்டமிட்டபடி, கடந்த 29-ம் தேதி பிரசாந்த் வீட்டில் இருந்தபோது, வெங்கட் சாய் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பிரசாந்துக்கு அதிக அளவு மதுவை கொடுத்து அவரை மயக்க நிலைக்கு தள்ளியுள்ளார். சுயநினைவிழந்த பிரசாந்தை மொட்டை மாடிக்கு அழைத்து சென்று அங்கிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளனர்.

இதில் பிரசாந்த் படுகாயமடைந்தாலும், அவர் உயிரிழக்கவில்லை. சந்தியாவும், வெங்கட் சாயும் சேர்ந்து அவரை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்ததும், 'உன் கணவர் உயிரோடு இருந்தால் நாம் உல்லாசமாக இருக்க முடியாது' என்று அனில், சந்தியாவிடம் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து சந்தியா, தனது கணவருக்கு மயக்க ஊசியையும், கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தையும் கலந்து கொடுத்துள்ளார். ஊசி போட்டதும் படுக்கையில் இருந்த பிரசாந்த் துடிதுடிக்க ஆரம்பித்துள்ளார். அப்போது சந்தியா, தனது கணவர் என்று கூட பாராமல் காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது கணவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக சந்தியா உறவினர்களிடம் அழுது நாடகமாடியுள்ளார். ஆனால் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பிரசாந்த்தின் தாய் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சந்தியாவிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 'வெளிநாட்டில் இருந்து வந்த என் கணவர் எங்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தார். அடிக்கடி தனிமையில் சந்திக்க முடியவில்லை. இதனால் அவர் எங்களுக்கு தொந்தரவாக இருந்து வந்தார். அதனால் எனது கள்ளக்காதலன் அனில் மற்றும் வெங்கட் சாய் ஆகியோருடன் சேர்ந்து என் கணவரை கொலை செய்தேன்' என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சந்தியா, அனில், வெங்கட் சாய் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Husband MurderNizamabad CrimeTamil NewsWife Affairஅனில்கள்ளக்காதல்கொலைசந்தியாநிஜாமாபாத்பிரசாந்த்மனைவி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சவுரவ் கங்குலி பயோபிக் படத்தின் முதல் போஸ்டரில் ராஜ்குமார் ராவ் சவுரவ் கங்குலி பயோபிக்: ராஜ்குமார் ராவ் போஸ்டர் வைரல்!
Next Article நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் பிரகாஷ் தாய் கிழவி பட இயக்குநருக்கு சிவகார்த்திகேயன் சொகுசு கார் பரிசு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கைது செய்யப்பட்ட ஐடி ஊழியரின் மனைவி மற்றும் உறவினர்கள்

ஐடி ஊழியர் கொலை: மனைவியும் உறவினர்களும் கைது

டெல்லியில் ஐடி ஊழியர் வினய் குப்தா கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி…

ஆகஸ்ட் 23, 2026

48 ஆண்டுகளுக்குப் பிறகு புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல கணக்கெடுப்பு

ஒடிசா மாநிலத்தின் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயிலில்,…

ஆகஸ்ட் 23, 2026

சர்வதேச பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்: செப். 1 முதல் புதிய நடைமுறை

செப்டம்பர் 1 முதல் சர்வதேச விமான பயணிகளுக்கு…

ஆகஸ்ட் 23, 2026

டாஸ்மாக் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில்…

ஆகஸ்ட் 23, 2026

பவன் கல்யாண் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா பயணம்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், வலது…

ஆகஸ்ட் 23, 2026

You Might Also Like

மாணிக்கம் தாகூர் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க பொதுக்கூட்டம் குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க குழுவில் கூடுதல் உறுப்பினர்கள் நியமனம்

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டம் ஜூலை 15, 2026 அன்று நடைபெறுகிறது. இதற்காக பொதுக்கூட்ட குழுவில் கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.

1 Min Read
தமிழக அரசின் வெற்றி சோலார் திட்டம் குறித்த அறிவிப்பு
தமிழ்நாடு

5 வருட மின் வரி விலக்கு: தமிழக அரசின் ‘வெற்றி சோலார்’ திட்டம் அறிவிப்பு!

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 'வெற்றி சோலார் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கும் நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு…

2 Min Read
தேசிய தேர்வு முகமை அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

நீட் தேர்வு கட்டணம் திரும்பப் பெற இன்றே கடைசி நாள்: தேசிய தேர்வு முகமை

நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்பப் பெற, வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட மாணவர்களுக்கு இன்றே கடைசி வாய்ப்பு என தேசிய தேர்வு முகமை…

1 Min Read
தமிழ்நாடு

ரூ.27,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், ரூ.27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் (பொறுப்பு) மகாலட்சுமி கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் பல சார்பதிவாளர் அலுவலகங்களில் உதவியாளர்களே பொறுப்பு சார் பதிவாளர்களாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?