முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.

அவர் பேசுகையில், 'எதிர்க்கட்சிகளை எதிரிகட்சிகளாக பார்க்காமல், அரசியலில் ஒரு மாண்பை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர் விஜய். 717 மதுக்கடைகளை மூடிய அறிவிப்பு, பெண்களின் பாதுகாப்புக்காக சிறப்பு படை, மீனவர்களைப் பாதுகாக்கும் அறிவிப்பு போன்றவை வரவேற்கத்தக்கவை. எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து ஒருவர் முதலமைச்சராகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டார்.

மேலும், 'த.வெ.க. தனது ஆட்சியை தக்கவைக்க குதிரை பேரம் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. முதலமைச்சர் விஜயின் ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்கும் என நம்புகிறேன்' என்றும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இறுதியாக, 'முதலமைச்சர் விஜயை சந்திக்க அன்று முகத்தை மூடி வந்தவர் யார் என்பதை முதலமைச்சர் விஜய் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்' என்று அவர் வலியுறுத்தினார்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version