MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேற்கு வங்காள புதிய முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்பு: யார் இந்த சுவேந்து அதிகாரி..?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேற்கு வங்காள புதிய முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்பு: யார் இந்த சுவேந்து அதிகாரி..?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - மேற்கு வங்காள புதிய முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்பு: யார் இந்த சுவேந்து அதிகாரி..?

இந்தியா

மேற்கு வங்காள புதிய முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்பு: யார் இந்த சுவேந்து அதிகாரி..?

Admin
Last updated: மே 9, 2026 5:55 காலை
Admin
Share
SHARE

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்றுள்ளது. கடந்த பதினைந்து வருடங்களாக அங்கு ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்து இருக்கின்றது. இதையடுத்து பாஜகவின் சட்டமன்ற குழு தலைவராக சுவேந்து அதிகாரி அக்கட்சியின் எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து ஆட்சி அமைக்க சுவேந்து அதிகாரி உரிமை கோரினார். பின்னர் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த நிலையில், இன்று மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக சுவேந்து அதிகாரி பதவியேற்க உள்ளார்.

முன்னதாக பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். முதல்முறையாக ஆட்சியை பா.ஜ.க. அங்கு கைப்பற்றி உள்ளது. இந்த சூழலில் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது.

அதில், சட்டசபை பா.ஜ.க. கட்சி தலைவராக (முதல்-மந்திரி) சுவேந்து அதிகாரி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் பாஜக அரசுக்கு இரண்டு துணை முதல்-மந்திரிகள் முக்கிய பொறுப்புகளை மேற்கொள்வார்கள் என கட்சி தலைவர்கள் குறிப்பிட்டனர். கட்சியின் மூத்த தலைவர்களான திலீப் கோஷ், மற்றும் பாஜக மாநிலத தலைவர் சமிக் பட்டாச்சார்யா ஆகியோருக்கு துணை முதல்-மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சுவேந்து அதிகாரி தலைமையிலான அரசு இன்று (சனிக்கிழமை) பதவியேற்கிறது. கொல்கத்தாவில் உள்ள படைவீரர் அணிவகுப்பு மைதானத்தில் விழா நடக்கிறது. சுவேந்து அதிகாரி மற்றும் புதிய மந்திரிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பிரதமர் மோடி, அமித்ஷா, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

பிரதமர் உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்வதால், கொல்கத்தாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய முதல்-மந்திரியாக பதவியேற்கும் சுவேந்து அதிகாரி, புர்பா மெதினிபூர் மாவட்டம் கற்குளி கிராமத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை பழம்பெரும் அரசியல்வாதியான சிசிர் அதிகாரி.

சுவேந்து, அவர் வசித்த பகுதியிலேயே பள்ளி, கல்லூரியில் படித்தார். தொடர்ந்து கொல்கத்தா ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவராக இருந்தார். அவரது அரசில் போக்குவரத்து, சுற்றுச்சூழல் ஆகிய இலாகாக்களின் மந்திரியாக இருந்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், பா.ஜ.க.வில் சேர்ந்தார். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை தோற்கடித்தார். சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக அதிரடியாக செயல்பட்டார். வெளியிலும் பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மாநிலத்தில் பா.ஜ.க.வின் முகமாக மாறினார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: 2028ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியை நீட்டிக்க முடிவு.. 94 ஆட்டங்களை நடத்த முடிவு
Next Article ரஷியா- உக்ரைன் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் எதிர்க்கும் எப்சிஆர்ஏ மசோதா: மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும்…

ஆகஸ்ட் 9, 2026

மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி விமானம் விபத்து: இருவர் காயம் இன்றி தப்பினர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பாராமதி அருகே…

ஆகஸ்ட் 9, 2026

பெங்களூரு மெட்ரோ இளஞ்சிவப்பு வழித்தடம்: ஆக.12-ல் சோதனை ஓட்டம்

பெங்களூரு மெட்ரோவின் புதிய இளஞ்சிவப்பு வழித்தடத்தில் ஆகஸ்ட்…

ஆகஸ்ட் 9, 2026

1.5 கோடி வாக்காளர்கள் நீக்கம்: சிறப்பு திருத்தப் பணி தீவிரம்

தேர்தல் ஆணையத்தின் மூன்றாம் கட்ட சிறப்பு தீவிர…

ஆகஸ்ட் 9, 2026

ஜென் ஸி-ஐ தவறாக வழிநடத்த முயன்றனர்: தர்மேந்திர பிரதான்

முன்னாள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

நீண்ட கொம்புகளுடன் கூடிய காளையுடன் திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்
இந்தியா

நீண்ட கொம்புகளுடன் காளையுடன் திருப்பதிக்கு பக்தர் நடைபயணம்

முன்னோர்களின் பாரம்பரியத்தை பின்பற்றி, நீண்ட கொம்புகளுடன் கூடிய காளையுடன் ஒருவர் திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த அரிய நிகழ்வு பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

1 Min Read
இந்தியா

சார் தாம் யாத்திரை: ஒரு மாதத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை!

உத்தரகண்டின் புகழ்பெற்ற சார் தாம் தலங்களுக்கு ஒரே மாதத்தில் 12 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டு பக்தர்களின் வருகை வரலாறு காணாத உச்சத்தை…

1 Min Read
திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா
இந்தியா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

1 Min Read
ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் 'விக்ரம்-1' ராக்கெட்
இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் சீற்றம்!

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1' நாளை விண்ணில் ஏவப்படுகிறது. 450 கி.மீ உயர சுற்றுப்பாதையை அடையும் இலக்குடன் சோதனைப் பயணம்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?