திமுக மற்றும் அதிமுக இனி தமிழ்நாட்டில் இல்லை என்றும், இனி ஒரே கட்சி தவெக தான் என்றும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தவெக கட்சியின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
மேலும் அவர் தனது உரையில், "திமுகவில் கடைசி வரைக்கும் அவர்களே தான் பதவியில் இருப்பார்கள். முன்னாள் திமுக அமைச்சர்கள் யாராவது ஒருவர் எம்.எல்.ஏ. ஆனால் கூட, நான் எனது ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்கிறேன்" என்று சவால் விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தலைவர் விஜய் எனக்காக பிரச்சாரம் செய்ய கொளத்தூர் தொகுதிக்கு வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வந்தார். அப்போதே எனது வெற்றி உறுதியாகிவிட்டது. கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டாச்சு. ஸ்டாலின் என்ன, அவருடைய அப்பாவே நின்றிருந்தாலும் அவரைத் தோற்கடித்திருப்பேன்" என்று ஆவேசமாகப் பேசினார்.
"சொல்வதைச் செய்யும் ஒரே தலைவர் தமிழக முதல்வர் விஜய் மட்டுமே. தமிழ்நாட்டில் இனி தவெக கட்சி மட்டுமே ஆட்சி அமைக்கும். திமுகவும் கிடையாது, அதிமுகவும் கிடையாது" என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
இந்தக் கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக கட்சியின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
