நடிகர் விக்ரம், இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரியா ஷிபு நடிக்கிறார். பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில், நடிகர் விக்ரம் கேரள மாநிலம் மூணாறுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களை அவர் சந்தித்தார். இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
விக்ரமை நேரில் கண்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், தங்களுக்குப் பிடித்த அவரது திரைப்படங்கள் குறித்து அவருடன் மனம்விட்டுப் பேசினர். குறிப்பாக, 'அந்நியன்' படத்தில் இடம்பெற்ற 'அண்டங்காக்கா கொண்டக்காரி' பாடலை அவருடன் சேர்ந்து பாடி மகிழ்ந்தனர். இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், தொழிலாளர்கள் விக்ரமுடன் செல்ஃபி வீடியோக்களையும் எடுத்துக் கொண்டனர்.
நடிகர் விக்ரம் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இணைந்து பாடிய 'அண்டங்காக்கா கொண்டக்காரி' பாடலின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த எதிர்பாராத சந்திப்பு, தொழிலாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.