அதிமுக எம்எல்ஏ பதவியில் இருந்து விலகிய சி.விஜயபாஸ்கர், தவெகவில் இணைய முடிவெடுத்துள்ளார். இந்த தகவலை அவரது ஆதரவாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தவெகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் விஜயபாஸ்கரின் முடிவை முழு மனதுடன் வரவேற்போம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என புதுக்கோட்டையில் அவரது ஆதரவு அதிமுக நிர்வாகிகள் கூட்டாக முடிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 24 ஒன்றிய செயலாளர்கள், 8 நகர செயலாளர்கள், 40 மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், விஜய பாஸ்கர் தலைமையில் தவெகவில் இணைவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அவருடன் தவெகவில் இணைய தயாராக உள்ளனர்.