விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட தகவல்: அறப்போர் இயக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தவெகவில் சேர்வது தொடர்பாக அறப்போர் இயக்கம் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் தனது எக்ஸ் தளத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், 'அதிமுக ஆட்சியில் குட்கா முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் திருட்டுத்தனமாக குட்கா விற்க அனுமதி கொடுத்ததாக புகார் கூறப்பட்ட அன்றைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அன்றைய டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் மீது அதிமுக மற்றும் திமுக ஆட்சிக்காலங்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தூயசக்தி வாஷிங் மெஷின் மூலம் சுத்தம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version