MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: TN CM Live: தமிழக முதல்-அமைச்சரானார் விஜய்: முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா..?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: TN CM Live: தமிழக முதல்-அமைச்சரானார் விஜய்: முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா..?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - TN CM Live: தமிழக முதல்-அமைச்சரானார் விஜய்: முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா..?

தமிழ்நாடு

TN CM Live: தமிழக முதல்-அமைச்சரானார் விஜய்: முதல் கையெழுத்து எதற்கு தெரியுமா..?

Admin
Last updated: மே 10, 2026 11:24 காலை
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து முக்கிய கோப்புகளில் முதல்-அமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அதன்படி இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்கள் கட்டணமில்லா மின்சாரம் இலவசம் என்ற முதல் கோப்பில் கையெழுத்திட்டார் முதல்-அமைச்சர் விஜய். பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான கோப்பிலும், மாவட்ட வாரியாக போதைப்பொருள் தடுப்புப்படை பிரிவு கோப்பிலும் விஜய் கையெழுத்திட்டார்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்களாக என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார். ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

அவர்களுக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அப்போது அங்கு திரண்டு இருந்த ரசிகர்கள் மற்றும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர். இதற்கான விழா சென்னை பெரியமேடு நேரு உள்விளையாட்டரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. கவர்னர் அர்லேகர், விஜய்க்கு பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். விஜய்யுடன் த.வெ.க.வை சேர்ந்த 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர்.

விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவில், தமிழக கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் கூட்டணி தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

தற்போது ”வந்தே மாதரம்” பாடலுடன் விஜய் பதவியேற்பு விழா தொடங்கி உள்ளது.

தமிழக முதல்- அமைச்சராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் ஜோசப் விஜய் மேடையில் அமர்ந்துள்ளார். அவருடன் தமிழக கவர்னர், முக்கிய தலைவர்கள், அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். சற்று நேரத்தில் புதிய வரலாறு தொடங்க உள்ளது.

தமிழக முதல்- அமைச்சராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் ஜோசப் விஜய், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்திற்கு வருகை தந்த கவர்னர் ராஜேந்திர அர்லேக்கரை பொன்னாடை போர்த்தி வரவேற்றார்

விரைவில் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்கவுள்ள தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் ஜோசப் விஜய், சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் வெள்ளை சட்டை, கருப்பு கோட், கருப்பு பேன்ட் அணிந்தபடி வருகை தந்துள்ளார்.

விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்காக கவர்னர் மாளிகையில் இருந்து கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் புறப்பட்டார்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. அவருக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில், முதன் முதலில் ஆதரவு கரம் நீட்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் தான்.

அதைத் தொடர்ந்து, பல்வேறு பிரயத்தனத்திற்கு பிறகு இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் என தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும் த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து விஜய்யை முதல்-அமைச்சராக பதவியேற்க கவர்னர் ஆர்.வி.அர்லேகர் நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழா சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. விழாவில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதற்காக ராகுல்காந்தி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து, நேரடியாக பதவியேற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு தற்போது வருகை தந்துள்ளார்.

த.வெ.க. தலைவர் விஜய் இன்று தமிழக முதல்-அமைச்சராக சற்று நேரத்தில் பதவியேற்க உள்ள நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், பிரபலங்கள், நடிகர் , நடிகைகள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டுள்ளனர்.

தவெக தலைவர் விஜய் இன்று தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் முதல் வரிசையில் முதல்அமைச்சரின் இருக்கைக்கு நேர் எதிரே விஜய்யின் பெற்றோர் இருக்கை அமர்ந்துள்ளனர்.

பதவியேற்பு விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய். தவெக தலைவர் விஜய்கு பூங்கொடுத்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்கும் விழாவிற்கு நடிகை திரிஷா வருகை தந்துள்ளார். பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ள சினிமா நண்பர்களுடன் உற்சாகமாக உரையாடினார்.

காலை 10 மணியளவில் நேரு ஸ்டேடியத்தில் விஜய்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர் அர்லேகர்.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்கும் நிலையில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காவல் ஆணையர் தலைமையில் 5 கூடுதல் ஆணையர்கள், 12 இணை ஆணையர் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நேரு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வமாக வெளியானது அமைச்சரவை பட்டியல்

விஜய்யுடன் சேர்த்து அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்கும் நிலையில் அவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆனந்த், ஆதவ், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார்.ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொள்கின்றனர்.

விஜய் அளித்த 9 பேர் அமைச்சரவை பட்டியலை ஏற்று கொண்டதாக கவர்னர் மாளிளை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நாளை பதவியேற்கின்றனர். மே 13-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு கவர்னர் அர்லேகர் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்.

விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்தார் ராகுல் காந்தி

முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்கும் விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் நேற்று இரவு முதல் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சராக விஜய் பதவி ஏற்றுக்கொள்கிறார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதற்காக கவர்னர், ‘ஐ’ (நான்) என்று ஆங்கிலத்தில் பதவிப் பிரமாணத்தை தொடங்கி வைத்ததும், விஜய் தமிழில், ‘சி.ஜோசப் விஜய் எனும் நான்…’ என்று உறுதிமொழியை வாசிப்பார். அதுபோல ரகசிய காப்பு உறுதிமொழியையும் கவர்னர் தொடங்கி வைக்க, விஜய் அதை தொடர்ந்து படிப்பார்.

விஜய் வாயில் இருந்து ஒலிக்கப்போகும் இந்த வார்த்தைக்காக விஜய் ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் நீண்ட நாளாக காத்திருந்தனர். அவர்களது கனவு இன்று நிறைவேறப்போகிறது. விஜய்யை தொடர்ந்து. அவரது அமைச்சரவையில் இடம் பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு உறுதிமொழியை வாசிப்பார்கள்.

முன்னதாக தலைமைச் செயலாளர் சாய்குமார், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி அழைப்பு விடுப்பார். அதை தொடர்ந்து பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். பதவி ஏற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் விருந்தினர் அனைவருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்படும்.

பின்னர் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து நேராக தலைமைச்செயலகம் செல்வார்கள். அங்கு முதல்-அமைச்சர் அறையில் உள்ள இருக்கையில் விஜய்யை மூத்த அமைச்சர்கள் அமர வைப்பார்கள்.

த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சராக பதவியேற்கவுள்ளவருமான விஜய், தனது இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளார். அவர் இன்று ஜவஹர்லால் நேரு மைதானத்தில் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார்.

த.வெ.க. தலைவரும், முதல்-அமைச்சர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று அன்னையர் தினம், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்…” என்று கூறினார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் சுமார் 6 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பாஸ் அனைவருக்கும் தரப்பட்டுள்ளது. நேரு விளையாட்டு அரங்கு அமைந்துள்ள பெரியமேடு பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாஸ் இல்லாதவர்கள் வருவதை தடுக்க சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் தம்பி விஜய்க்கு மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அன்பு தம்பி விஜய்க்கு கேப்டனின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தவெக தலைவர் விஜய் இன்று முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிலையில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ஆதவ் அர்ஜுனா ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்துள்ளார்.

இன்று தமிழக முதல்-அமைச்சராகப் பதவியேற்கவுள்ள தவெக தலைவர் விஜய்யின் சென்னை இல்லத்தில் கான்வாய் வாகனங்கள் வருகை தந்துள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் இன்று முதல்-அமைச்சராக பதவியேற்கும் நிலையில் அக்கட்சியின் தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் விஜய் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் சென்னையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் இருந்து கிளம்பி உள்ளார்.

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் இன்று பதவியேற்க உள்ள நிலையில் பதவியேற்பு விழாவை நேரலையில் காண சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி கீழ்காணும் 20 இடங்களில் எல்.இ.டி. மின்னணுத் தொலைக்காட்சிகள் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

4. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்டிரல் ரெயில் நிலையம்

மேற்கண்ட இடங்களில் எல்.இ.டி திரையின் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 13-ந்தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.

த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு த.வெ.க.விடம் இருந்தது. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நேற்று முன்தினம் அறிவித்தன.

தொடர்ந்து, வி.சி.க.வும் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்தது. இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. எனினும், ஆட்சியில் பங்கு கொள்ள மாட்டோம் என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்தன. இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.

இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்யும்போது, த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும். இது பெரும்பான்மைக்கும் (118) கூடுதல் ஆகும்.

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.

இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு
Next Article இலைக் கட்சி எம்எல்ஏக்களை ‘இழுத்து வர’ முடியுமா? | உள்குத்து உளவாளி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றித்திரிந்த உடும்பை தீயணைப்புத்துறையினர் பிடிக்கும் காட்சி
தமிழ்நாடு

குற்றாலம் மெயின் அருவியில் உடும்பு: பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

குற்றால மெயின் அருவியில் அடித்து வரப்பட்ட உடும்பு சுற்றித் திரிந்த நிலையில், தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். வனத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை.

1 Min Read
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

காலை உணவு திட்ட பெயர் மாற்றம் முறையல்ல: துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் பெயரை மாற்றியது முறையல்ல என்றும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

உயர் கல்வித்துறைக்கு ஆபத்து: தமிழக அரசுக்கு பெ.சண்முகம் எச்சரிக்கை

தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்கள் மற்றும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பெ.சண்முகம் கவலை தெரிவித்துள்ளார். மத்திய அரசு மற்றும்…

1 Min Read
தமிழ்நாடு

வெயில் சதம்: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் உச்சம் தொட்ட வெப்பம்!

தமிழகத்தில் 4 நகரங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. மதுரை, கரூர், பாளையங்கோட்டை ஆகிய நகரங்களில் கடும் வெப்பம் பதிவாகியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?