விஜய் மௌன புரட்சி செய்கிறார்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாவிட்டால் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த தனித்தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது என்றும், இந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்றும் கூறினார்.

மேலும், கர்நாடகாவிற்கு முதலமைச்சர் விஜய் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், கர்நாடக முதலமைச்சருடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தினார். மேகதாது பிரச்சனை குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் குரலை முதலமைச்சர் விஜய் பொருட்படுத்துவதில்லை என்றும், அவர் மௌன புரட்சி செய்வதில் வல்லவர் என்றும் விமர்சித்தார்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வேளாண் பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என்றும், இல்லையேல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

கர்நாடகாவில் தற்போது 80 டிஎம்சி தண்ணீர் இருந்தும், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மறுப்பதாக அவர் குற்றம் சாட்டினார். மேகதாது அணை கட்டி முடிக்கப்பட்டால் தமிழகத்திற்கு மேலும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முந்தைய திமுக ஆட்சியில் பல்வேறு தீர்ப்புகள் மூலம் தண்ணீர் பெற்றுத் தந்ததாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்றும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version