விஜய் தான் முதல்வர்-தவெகவில் இணைந்த கடம்பூர் ராஜூ பேச்சு

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், என்.ஆர்.சிவபதி ஆகியோர் இன்று த.வெ.க.வில் இணைந்தனர். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இவர்கள் த.வெ.க.வில் இணைந்தனர்.

த.வெ.க.வில் இணைந்தது குறித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வாழும் காலம் வரை எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தார். இனி எப்போதும் விஜய் தான் முதலமைச்சர் ஆக இருப்பார்' என்று தெரிவித்தார். மேலும், '2011 சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது விஜய் நற்பணி மன்றம் தான்' என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தின் தீயசக்தியை அகற்ற வேண்டுமென்றால் த.வெ.க. என்ற தூயசக்தி வர வேண்டும் என்றும், இனி த.வெ.க.வின் பணிகளை சிறப்பாக செய்வோம் என்றும் கடம்பூர் ராஜூ பேசினார். த.வெ.க.வில் இணைய தாயுள்ளத்தோடு ஒப்புதல் அளித்த பொற்கால முதல்வர் விஜய்க்கு நன்றி என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

இந்த இணைப்பு நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எதிர்கால அரசியல் நகர்வுகளுக்கு இது ஒரு முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version