திருச்செந்தூர் கோயிலில் செல்போன்களுக்கு தடை: பறிமுதல் செய்யப்படும்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வரும் 1-ஆம் தேதி முதல் பக்தர்கள் செல்போன்களை பயன்படுத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை தீவிரமாக நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, கோயிலுக்குள் நுழையும் பக்தர்களின் தரிசன வரிசை மற்றும் அனைத்து பகுதிகளிலும் முழுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களிடம் செல்போன்கள் கண்டறியப்பட்டால் அவை உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.

எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் செல்போன்களை தங்கும் அறைகளிலோ அல்லது கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பெட்டகங்களிலோ வைத்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த புதிய விதிமுறை பக்தர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலின் புனிதத்தன்மையையும், பக்தர்களின் ஆன்மீக அனுபவத்தையும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version