தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
பதவியேற்புக்கு முன்பே பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்லி ஆளுநர் நிர்பந்திப்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி, சட்டப்பேரவையில்தான் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.