முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி பேட்டி

முதல்வர் விஜய்யை சந்தித்த பின் சி.விஜயபாஸ்கர் பேட்டி

அதிகாரத்தால் ஆள்வது வேறு, அன்பால் ஆள்வது வேறு என்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் விஜய் அவர்களை சந்தித்த பிறகு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நெகிழ்ச்சியுடன் பேட்டியளித்துள்ளார். நாங்கள் இன்று முதல்வர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். நான், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோரை முதல்வர் விஜய் தனித்தனியாக சந்தித்து பேசினார். சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்தது.

முதல்வர் விஜய் மிகுந்த அன்போடும், பாசத்தோடும், வாஞ்சையோடும் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து, கை குலுக்கி, அவர்களுக்கு முன்பு நின்று வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்தார். அதேபோல், ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நலம் விசாரித்து, த.வெ.க துண்டை அவர்களுக்கு அணிவித்து, தங்களுக்கான உறுப்பினர் அட்டைகளையும் வழங்கினார். அரசு பணிகள் இருந்தாலும் கூட, எங்களுக்காக நேரம் ஒதுக்கி, முக்கியத்துவம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.

இதன் மூலம் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியும் மனநிறைவும் ஏற்பட்டுள்ளது. அதிகாரத்தால் நாட்டை ஆள்வது என்பது வேறு, மக்கள் அன்பால் ஆள்வது என்பது வேறு. இன்றைக்கு சாமானிய மக்களின் அன்பை வென்றிருக்கும் மாற்று சக்தியாக, அனைவரையும் அரவணைக்கக்கூடிய தலைமைப் பண்பை விஜய் வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிகழ்வு முழுமையாகவும், மனதிற்கு இதமாகவும் இருக்கிறது.

இனி எந்த தேர்தல் வந்தாலும், எல்லா தேர்தல்களிலும் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். அதற்கு நாங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் பாடம் கற்றிருக்கிறோம். அந்த பாடத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை ஏற்று, வெற்றிக்கு துணை நிற்போம் என்று சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இந்த சந்திப்பு, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மனிதநேயத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version