திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இது போன்ற செயல்களில் ஈடுபடும் கயவர்களுக்கு சட்டத்தின் மூலம் மிகக் கடுமையான தண்டனை கிடைக்கப் பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானது என்றும், இது போன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு இரும்புக்கரம் கொண்டு தண்டிக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.