ஞாபக மறதியை போக்கி மூளைக்கு சக்தி அளிக்கும் வல்லாரை கீரையை வைத்து சுவையான துவையல் செய்வது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பு விளக்குகிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள் ஏராளம்.
இந்த துவையலை தயாரிக்க தேவையான பொருட்கள்: வல்லாரைக்கீரை – ஒரு கப், பூண்டு – 2 பல், தேங்காய் துருவல் – கால் கப், காய்ந்த மிளகாய் – 5, எலுமிச்சைச் சாறு – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன், மற்றும் தேவையான அளவு உப்பு.
செய்முறை: முதலில் வல்லாரை கீரையை நன்கு சுத்தம் செய்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்த வல்லாரைக்கீரை, பூண்டு, தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதக்கிய கலவையுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
இறுதியாக, அரைத்த விழுதில் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கலந்து பரிமாறினால், சுவையான மற்றும் ஆரோக்கியமான வல்லாரை துவையல் தயார். இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடும்போது ஞாபக சக்தி பெருகுவதோடு, மூளைக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.