MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வைகை அணை தண்ணீர் பச்சை நிறம்: குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வைகை அணை தண்ணீர் பச்சை நிறம்: குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வைகை அணை தண்ணீர் பச்சை நிறம்: குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிப்பு

தமிழ்நாடு

வைகை அணை தண்ணீர் பச்சை நிறம்: குடிநீருக்கு உகந்ததல்ல என அறிவிப்பு

Sri Prem Kumar R
Last updated: மே 29, 2026 7:58 காலை
Sri Prem Kumar R
Share
SHARE

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் 71 அடி உயர வைகை அணையின் நீர்மட்டம், கோடை வெயிலின் தாக்கம் மற்றும் போதிய நீர்வரத்து இல்லாததால் தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 20.83 அடியாக சரிந்துள்ளதுடன், மொத்த நீர் இருப்பு 117 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணையின் நீர்மட்டம் 20 அடிக்கு கீழ் சென்றால், குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்ற நிலையில், முதற்கட்டமாக மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் வினியோகம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுரை மாநகர் மற்றும் உசிலம்பட்டி, சேடப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியடைந்து வருகின்றனர். தற்போது அணையில் உள்ள குறைந்த அளவு தண்ணீரை கொண்டு தேனி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மட்டும் சுழற்சி முறையில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த தண்ணீரும் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வைகை அணையில் தற்போது உள்ள தண்ணீரின் தரம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ஸ்டீபன், தேனி மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர்களுக்கு அவசர அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், 'வைகை அணையின் அடிமட்டத்தில் உள்ள தண்ணீர் மாசடைந்து அடர்பச்சை நிறமாக மாறியுள்ளது. பல்வேறு முறைகளில் சுத்திகரிப்பு செய்தாலும் தண்ணீரை முழுமையாக சுத்தப்படுத்த முடியவில்லை. எனவே தற்போது உள்ள தண்ணீர் குடிநீருக்கு உகந்ததல்ல. மேலும் அந்த தண்ணீரை மக்கள் பயன்படுத்தினால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Vaigai Damகுடிநீர் தட்டுப்பாடுதமிழ்நாடுதேனிமதுரைவைகை அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மனோ தங்கராஜ் மனக்குழப்பத்தில் இருக்கிறார்: அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சனம்
Next Article தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: ஈ.பி.எஸ்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி

எரிபொருள் நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை: பிரதமர் மோடி

மேற்கு ஆசியப் போர் மற்றும் எரிபொருள் விநியோக நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய ரயில்வே…

ஜூலை 17, 2026

பணியிடப் பாதுகாப்பு: பெண்களின் பணித்திறனுக்கு மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

பெண்களின் பணித்திறனை அதிகரிக்கவும், அனைவரையும் உள்ளடக்கிய தேசிய…

ஜூலை 17, 2026

இஸ்லாமிய வீட்டுப்பாடம்: ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இந்து மாணவருக்கு இஸ்லாமிய வீட்டுப்பாடம் கொடுத்ததாக…

ஜூலை 17, 2026

பீகாரில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்பு

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் 3 வயது…

ஜூலை 17, 2026

ஜூலை 20 வரை உயிரோடு இருப்பேன்: சோனம் வாங்சுக் உறுதி

லடாக் மக்களின் நலனுக்காகப் போராடும் சோனம் வாங்சுக்,…

ஜூலை 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு எஸ்.டி.பி.ஐ. வரவேற்பு: சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம் குறித்து கேள்வி

தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வரவேற்றுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், வி.சி.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதை பாராட்டியுள்ளது. அதே சமயம், சிறுபான்மையினர் பிரதிநிதித்துவம்…

1 Min Read
தமிழ்நாடு

கேள்வி கேட்பதே குற்றமா? சி.விஜயபாஸ்கர் மறைமுக விமர்சனம்!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அரசியலில் கேள்வி கேட்பதே குற்றமாகப் பார்க்கப்படுவதாகக் கூறி, எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மெரினாவில் மாயமான மாணவர் உடல் கரை ஒதுங்கியது

சென்னை மெரினாவில் கடல் அலையில் சிக்கி மாயமான பிளஸ்-1 மாணவர் சுதர்சனின் உடல் நேற்று துறைமுகம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி…

1 Min Read
அமைச்சர் நிர்மல் குமார் மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிதல்
தமிழ்நாடு

8 கிராம மீனவர்களின் கோரிக்கைகள்: அமைச்சர் நிர்மல் குமார் உறுதி

8 கிராம மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் உறுதியளித்துள்ளார். விரைவில் சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?