MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: 15 வயது வீரருடன் பெற்றோரும் பயணம்: பிசிசிஐயின் நெகிழ்ச்சி முடிவு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - 15 வயது வீரருடன் பெற்றோரும் பயணம்: பிசிசிஐயின் நெகிழ்ச்சி முடிவு!

விளையாட்டு

15 வயது வீரருடன் பெற்றோரும் பயணம்: பிசிசிஐயின் நெகிழ்ச்சி முடிவு!

Admin
Last updated: ஜூன் 7, 2026 10:27 காலை
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட் அணியில் முதன்முறையாக 15 வயதில் தேர்வு செய்யப்பட்டுள்ள இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன், அவரது பெற்றோரும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உடன் செல்ல இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நெகிழ்ச்சியான அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியில் அறிமுகமானார். அப்போது அவருக்கு ஆதரவாக அவரது அண்ணன் அஜித் டெண்டுல்கர் உடன் சென்றார். தற்போது 37 ஆண்டுகளுக்குப் பிறகு, இதே போன்றதொரு நெகிழ்ச்சியான நிகழ்வு இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் அரங்கேற உள்ளது.

பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறுகையில், 'வைபவ் இன்னும் ஒரு சிறுவன் என்பதால், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்குச் செல்லும் இந்திய அணியுடன் அவரது பெற்றோரும் உடன் செல்ல அனுமதித்துள்ளோம். புதிய சூழலில் வைபவ் எளிதாகப் பழக அவர்கள் உடன் இருப்பது அவருக்குப் பெரிதும் உதவும். பெற்றோருக்கான ஒட்டுமொத்தப் பயணச் செலவையும் பிசிசிஐ-யே ஏற்கும்' என்று தெரிவித்தார்.

தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்தியா ஏ அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, சர்வதேச கிரிக்கெட்டின் அடுத்த கட்டத்திற்கு நகர உள்ளதால், அவரது மன உறுதியை அதிகரிக்கவும், தேவையற்ற அழுத்தங்களைக் குறைக்கவும் அவரது பெற்றோர் அருகில் இருப்பது அவருக்கு மிகச் சிறந்த ஆதரவாக இருக்கும் என்று பிசிசிஐ கருதுகிறது. சமீபத்தில் ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியபோது, அணியின் மேலாளர் ரோமி பிந்தர் அவருக்கு ஒரு பாதுகாவலரைப் போல இருந்து வழிநடத்தினார். தற்போது அதைவிடப் பெரிய சர்வதேச அரங்கில் விளையாட உள்ளதால், அவரது பெற்றோரின் நேரடி ஆதரவை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. அசத்தலான திறமையைக் கொண்டுள்ள வைபவ் சூர்யவன்ஷிக்கு, இந்த முடிவு அவரது ஆட்டத்திறனை மேலும் அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:BCCICricketகிரிக்கெட்பிசிசிஐவைபவ் சூர்யவன்ஷி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விசிக மாநில செயலாளர் சங்கத்தமிழன் 3 மாதங்கள் இடைநீக்கம்
Next Article 07.06.2026 இன்றைய ராசிபலன்: தேவைகள் பூர்த்தியாகும் நாள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

You Might Also Like

விளையாட்டு

பென் ஸ்டோக்ஸ் மீது ஐசிசி விசாரணை: 250வது விக்கெட் சாதனை சர்ச்சையில் சிக்கியது

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்ச்சைக்குரிய வகையில் சாண்ட்னரின் wristband-ஐ தொட்டதாக எழுந்த புகாரில், ஐசிசி விசாரணைக்கு ஆளாகும் சூழல் உருவாகியுள்ளது.…

2 Min Read
பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்
விளையாட்டு

சென்னையில் பிக் பாஷ் லீக்: சிட்னியில் மோடி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் டி20 லீக் போட்டிகள் முதன்முறையாக சென்னையில் டிசம்பர் 12 அன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி சிட்னியில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறார்.

2 Min Read
விளையாட்டு

சுப்மன் கில் புதிய சாதனை: விராட் கோலியை முந்திய இளம் வீரர்!

சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3,000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

2 Min Read
ஐபிஎல் 2026

IPL 2026| ராஜஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்கும் குஜராத்

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரிவில்…

3 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?