MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சச்சினை விட 15 வயது இளையவர் வைபவ் சூர்யவன்ஷி: ஜாஸ் பட்லர் ரகசியம் உடைப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - விளையாட்டு - சச்சினை விட 15 வயது இளையவர் வைபவ் சூர்யவன்ஷி: ஜாஸ் பட்லர் ரகசியம் உடைப்பு

விளையாட்டு

சச்சினை விட 15 வயது இளையவர் வைபவ் சூர்யவன்ஷி: ஜாஸ் பட்லர் ரகசியம் உடைப்பு

Admin
Last updated: ஜூன் 11, 2026 3:52 மணி
Admin
Share
SHARE

இந்திய கிரிக்கெட்டின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு உலகளவில் கிடைத்துள்ள பெரும் வரவேற்பு, ஜாஸ் பட்லரால் சச்சின் டெண்டுல்கரின் ஆரம்பகால புகழுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. சமீபத்திய ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். ஜூன் 26 அன்று தொடங்கும் அயர்லாந்து தொடரில் களமிறங்கும்போது, சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக ஆடிய மிகக் குறைந்த வயது வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சூர்யவன்ஷியுடன் விளையாடிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர், ஸ்டூவர்ட் பிராடுடன் இணைந்து நடத்தும் யூடியூப் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் சூர்யவன்ஷி குறித்துப் பேசியுள்ளார். பட்லர் மற்றும் குஜராத் அணியின் உதவி பயிற்சியாளர் ஆசிஷ் கபூர் இடையேயான உரையாடலில், சச்சின் டெண்டுல்கர் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி இருவரின் ஆரம்பகால புகழின் ஒப்பீடு குறித்து விவாதிக்கப்பட்டது. சச்சின் தனது 16வது வயதில் 1989ல் பாகிஸ்தான் தொடரில் அறிமுகமானார்.

இது குறித்து பட்லர் கூறுகையில், 'ஆசிஷ் கபூரிடம் சச்சின் அறிமுகமான போது இருந்த சூழ்நிலை குறித்துக் கேட்டேன். சச்சின் அறிமுகமான போது, அவரைப் பற்றிய செய்திகள் பெரும்பாலும் செய்தித்தாள்களில் மட்டுமே வரும். மக்கள் அவரைப் பற்றி படித்து மட்டுமே தெரிந்து கொண்டனர். மைதானத்திற்கு நேரில் சென்றவர்கள் அல்லது தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்தவர்கள் மட்டுமே சச்சினின் ஆட்டத்தைக் கண்டனர். அப்போது சமூக ஊடகங்களோ, ஹைலைட்ஸ் வீடியோக்களோ கிடையாது. சச்சின் ஒரு அசாதாரண திறமைசாலி என்ற பேச்சு மட்டுமே மக்களிடையே பரவலாக இருந்தது.' என்றார்.

ஆனால், வைபவ் சூர்யவன்ஷியின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அவர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை என்றாலும், சமூக ஊடகங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அவரது ஆட்டத்தைப் பார்த்து ரசித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் மிக மதிப்புமிக்க வீரராகத் தேர்வு செய்யப்பட்ட அவர், 200க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 700 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். அதனால் தான் வைபவ்வின் புகழ் சச்சினின் ஆரம்ப காலத்தை விட மிக வேகமாக பரவியுள்ளது. அவர் இந்திய அணிக்கு முற்றிலும் தகுதியானவர்' என்றும் பட்லர் தெரிவித்தார். தற்போது இலங்கை மண்ணில் இந்திய ஏ அணிக்காக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி, அடுத்ததாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் பங்கேற்கத் தயாராகி வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:IPL 2026Jasprit BumrahSachin TendulkarVaibhav Suryaகிரிக்கெட்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மே மாத ஊதியம் உடனடியாக வழங்க அன்புமணி வலியுறுத்தல்
Next Article எத்தனால் பெட்ரோலுக்கு முழு வரிவிலக்கு: மத்திய அரசு அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் சட்டமன்ற கட்டிடம்

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி அலுவல் மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது. இன்று…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு…

ஜூலை 5, 2026

You Might Also Like

விளையாட்டு

கே.எல். ராகுல் தொடர்ந்து பேட்டிங் வரிசையில் பின்னால் வருவார்: டென் டோஷேட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் கே.எல். ராகுல் 6வது இடத்தில் களமிறங்கி முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அவர் தொடர்ந்து பேட்டிங் வரிசையில் பின்னால் வருவார் என…

1 Min Read
விளையாட்டு

இந்தியா vs ஆப்கானிஸ்தான்: 3 மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா – பிரின்ஸ் யாதவ் அறிமுகம்!

இந்தியா-ஆப்கானிஸ்தான் 2வது ஒருநாள் போட்டி லக்னோவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ் அறிமுகமாகிறார்.

3 Min Read
விளையாட்டு

இலங்கை வீரருக்கு அபராதம்: வைபவ் சூர்யவன்ஷியுடன் மோதல்

இந்தியா ஏ அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் மைதானத்தில் மோதலில் ஈடுபட்ட இலங்கை வீரர் விஷென் ஹாலம்பகேவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்துள்ளது.

2 Min Read
விளையாட்டு

டி20 வீரர் மட்டுமல்ல! வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் விளையாடும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பாராட்டியுள்ளார். இவர் டி20 மட்டுமல்லாமல் 50 ஓவர் கிரிக்கெட்டிலும் சிறந்து…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?