உத்தராகண்ட் சுரங்க விபத்து: 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

உத்தராகண்ட் சுரங்க விபத்து நடைபெற்ற பகுதி

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள பிப்பல்கோட்டி பகுதியில், தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் 18 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், திடீரென சுரங்கப்பாதைக்குள் பெருமளவில் தண்ணீர் புகுந்தது. இந்த எதிர்பாராத வெள்ளப்பெருக்கில் சிக்கி, சுரங்கத்தின் நுழைவாயில் பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டனர்.

தண்ணீர் புகுந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்தில், சுரங்கத்தினுள் 10 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. மீட்புப் பணிகளுக்காக ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரை உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தார். பேரிடர் படையினர் விரைந்து வந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

மீட்புப் பணிகளின்போது, இதுவரை 7 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், காணாமல் போன 2 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை குழுவினர் காயமடைந்தவர்களுக்குத் தொடர் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிபால்பட்டி சுரங்கப்பாதை விபத்து தொடர்பாக, டேராடூனில் உள்ள பேரிடர் மீட்பு நடவடிக்கை மையத்தில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு மேற்கொண்டார். அவர் அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கினார். மேலும், தொலைபேசி மூலம் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார். இன்று அவர் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version