அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ஆம் தேதி அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தியதும், பல நாடுகளில் உயிரிழப்புகளுக்குக் காரணமானதுமான மேற்கு ஆசியப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மீட்டெடுக்கப்படும் என்றும், தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் உறுதி செய்யப்படும் என்றும் இந்தியா நம்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், மீதமுள்ள விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு நிலையான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையிலான இந்த அமைதி ஒப்பந்தம், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றத்திற்கு ஒரு முடிவுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பிராந்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.