உ.பி: மசூதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை – மத குருவுக்கு ஆயுள் தண்டனை

உத்தர பிரதேச மாநிலம் ஹமிர் பூரில், மசூதி வளாகத்திற்குள் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், மத குரு முன்தாசிர் ஆலம்-க்கு போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவருக்கு ரூ.26,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி, குராரா காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழக்கமான மதப் பாடங்களைக் கற்க சென்ற சிறுமியையும் அவரது தம்பியையும் வகுப்புகள் முடிந்ததும், தம்பியை வெளியே அனுப்பிவிட்டு, சிறுமியை தனியாக மசூதியில் தரையை பெருக்கச் சொல்லியுள்ளார் மத குரு முன்தாசிர் ஆலம்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் மத குரு. அவரிடமிருந்து தப்பித்து ஓடிய சிறுமி, வீட்டிற்குச் சென்று தனது பாட்டியிடம் நடந்ததை அழுது கூறியுள்ளார். சிறுமியின் மாமா உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, குற்றவாளி முன்தாசிர் ஆலம்-க்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version