மம்தா குற்றச்சாட்டு: 12 வயது சிறுமி பாலியல் மிரட்டல் – நீதிமன்றத்தில் பரபரப்பு!

மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய வன்முறை தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஜோய் பால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கறிஞராக ஆஜரான மம்தா பானர்ஜி, "வங்காள மக்களைப் பாதுகாக்க வேண்டும். தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 1982ல் ஜோகேஷ் சந்திரா சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த மம்தா, நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாதாடினார்.

"இறந்த பத்து பேரில் ஆறு பேர் இந்துக்கள். காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய அனுமதிப்பதில்லை. என் குடும்பத்தில் 12 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்" என்று மம்தா நீதிமன்றத்தில் வேதனையுடன் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க காவல்துறை சரியாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை சம்பவங்கள் குறித்து நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் நீதி கிடைப்பதை உறுதிசெய்ய நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version