MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

தமிழ்நாடு

திருப்பூர்: காண்டூர் கால்வாயில் தவறி விழுந்து யானை உயிரிழப்பு

Admin
Last updated: மே 25, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீர் மற்றும் இரை தேடி வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சியை அடுத்த சர்க்கார்பதி அருகே காண்டூர் கால்வாயில் தண்ணீர் குடிக்க வந்த ஆண் யானை ஒன்று எதிர்பாராதவிதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்தது. கால்வாயில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், யானையால் வெளியேற முடியாமல் தத்தளித்து, நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது.

பின்னர், யானையின் உடல் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி யானையின் உடலை மீட்டனர். கால்நடை மருத்துவர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார்.

பிரேத பரிசோதனையில், உயிரிழந்தது சுமார் 45 வயதுடைய ஆண் யானை என்பதும், இது கேரள மாநில வனப்பகுதியில் இருந்து வந்த 'சில்லி கொம்பன்' என்றழைக்கப்படும் யானை என்பதும் தெரியவந்தது. இந்த யானை வனப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுடன் இயல்பாக பழகி வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, யானையின் உடல் திருமூர்த்தி அணை அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டது.

காண்டூர் கால்வாய் புதுப்பிக்கப்பட்ட பிறகு, வனவிலங்குகள் அடிக்கடி கால்வாயில் தவறி விழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்வதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, கால்வாய் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும், ரோந்து பணிகளை அதிகரிக்கவும், இதன் மூலம் வனவிலங்குகளை உயிருடன் மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Elephant Deathஉடுமலைகாண்டூர் கால்வாய்திருப்பூர்யானைவனவிலங்குகள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad1
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எபோலா பரவல்: காங்கோ, உகாண்டா, தெற்கு சூடானுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு
Next Article மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு ஜூன் 1 முதல் இலவச பேருந்து பயணம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழையால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர்.…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

You Might Also Like

தமிழ்நாடு

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம்: கனிமொழி கேள்வி

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டது குறித்து கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Min Read
தமிழ்நாடு

மேட்டூர் அணை திறப்பு: முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறப்பு மற்றும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம்: மரத்தில் கார் மோதிய விபத்தில் சென்னை டாக்டர் பலி

சென்னை மதுரவாயல் முகப்பேர் திருக்குறள் முனுசாமி தெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 79), டாக்டர் ஆவார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார்.…

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளை அறிக்கையை காரணம் காட்டாமல் செயல்பட வேண்டும் – அண்ணாமலை

தமிழகத்தை மீண்டும் வலுவான நிதிப் பாதைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?