தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகம் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், 'தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே மையமாகக் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் முழு நம்பிக்கையைப் பெற்று, ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் ஒருவராகப் பார்க்கப்படும் நமது வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், நமக்கு ஒரு பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார் என்பதை கழகத்தினர் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்தை நோக்கியே நமது பயணம் அமைய வேண்டும்.'
'ஆகவே, கழகத் தோழர்கள் யாரும், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாக, பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் விதமாக, சாலைகளிலோ, மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலோ, அல்லது போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையிலோ எங்கும் பேனர்கள், பதாகைகள் போன்றவற்றை கண்டிப்பாக வைக்கக் கூடாது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக அமையும் எந்தவிதமான கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது.'
'பேனர்கள் வைப்பது, கொண்டாட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட எந்தச் செயல் மூலமாகவும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கழகத் தலைவர் அவர்களின் சம்மதத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.'
தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள மேலும் ஒரு அறிவிப்பில், 'கழகத் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழக மக்களின் நலன் ஒன்றையே தலையாய நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம். தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்ற, தமிழ்ச் சொந்தங்களின் குடும்பத்தில் ஒருவராக இருக்கக்கூடிய…'
