MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

அரசியல்

பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

Admin
Last updated: மே 26, 2026 2:04 மணி
Admin
Share
SHARE

தமிழகத்தில் நிலவும் கடுமையான வெப்ப அலை சூழலைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறப்பை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ள விவசாய பயிர்கடன் தள்ளுபடி நடவடிக்கையை அவர் வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், தற்போது மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மாணவர்களின் உடல்நலம் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிக வெப்பத்தில் பள்ளிக்குச் செல்வதால் நீரிழப்பு, சோர்வு, வெப்பக் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. அதிக வெப்பம் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிப்பதுடன், அவர்களின் கற்றல் மற்றும் கவனிக்கும் திறனையும் குறைக்கக்கூடும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பள்ளிகள் திறக்கும் தேதியை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு தள்ளிப்போட வேண்டும் என்றும், பள்ளிகளில் போதுமான குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறைகள் மற்றும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் உடல்நலப் பாதுகாப்பு அரசின் முதன்மையான பொறுப்பு என்பதால், வெப்ப அலை சூழ்நிலையை தீவிரமாகப் பரிசீலித்து உடனடி முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அரசின் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை ராமதாஸ் வரவேற்றுள்ளார். 'கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க் கடன்களில், குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான கடன்களை முழுமையாகவும், சிறு விவசாயிகளின் அதே அளவுக்கான கடன்களில் 50 சதவீதத்தையும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரையிலான கடன்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும். இந்த அறிவிப்பு அனைத்து விவசாயிகளின் சுமையையும் முழுமையாகக் குறைக்காது என்றாலும், தற்போதைய பொருளாதார சூழலில் உழவர்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கும் முயற்சி' என அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான விதைகள், உரங்கள், இடு பொருட்கள் மானிய விலையில் கிடைக்கவும், பயிர்க்கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகள் தொடர்ந்து விவசாயம் மேற்கொள்ள புதிய கடனுதவிகள் எளிதில் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீதமுள்ள விவசாயிகளுக்கும் பயிர்க் கடனை ஓரளவு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Schoolsதமிழ்நாடு அரசுபயிர்க்கடன் தள்ளுபடிபள்ளிகள் திறப்புராமதாஸ்வெப்ப அலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நார்வே செஸ் 2026: பிரக்ஞானந்தா, குகேஷ் வெற்றி; கார்ல்சன் அதிர்ச்சி தோல்வி
Next Article திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

அரசியல்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min Read
அரசியல்

எரிபொருள் விலை உயர்வு: கார்ப்பரேட் லாபத்திற்காக மக்கள் நசுக்கப்படுகிறார்கள் – வேல்முருகன்

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுகின்றனர் - கார்ப்பரேட் லாபத்திற்காக மக்கள் நசுக்கப்படுவதாக வேல்முருகன் கண்டனம்.

2 Min Read
தமிழ்நாடு

தென் கொரியாவில் தமிழ் வம்சாவளியினர்: அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு

தென் கொரியாவில் வசிக்கும் தமிழ் வம்சாவளியினரை சந்தித்த அமைச்சர் கீர்த்தனா, அவர்களின் திறமை, உழைப்பு மற்றும் மனவலிமையை பாராட்டி, அரசு எப்போதும் துணை நிற்கும் என உறுதியளித்தார்.

1 Min Read
அரசியல்

முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி: தமிழகம் ரத்தக்காடாக மாறுவது பற்றி பேசுவாரா?

மதுரை கீழமாத்தூர் பாலியல் தொல்லை, சிறுவன் கொலை, ஓமலூர் மழைநீர் தேங்கி உயிரிழப்பு என தமிழகம் ரத்தக்காடாக மாறுவது குறித்து முதல்வர் விஜய் பேசுவாரா என எடப்பாடி…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?