MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு இதுதான் நிலை: துரைமுருகன் பதிலடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு இதுதான் நிலை: துரைமுருகன் பதிலடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு இதுதான் நிலை: துரைமுருகன் பதிலடி

தமிழ்நாடு

திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு இதுதான் நிலை: துரைமுருகன் பதிலடி

Fernandez
Last updated: ஆகஸ்ட் 24, 2026 6:54 காலை
Fernandez
Share
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்
SHARE

திமுகவை அழிக்கும் எண்ணத்துடன் செயல்படுபவர்களுக்கு இதுதான் முடிவு என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டசபை அரசியல் குறித்த தனது அனுபவங்களையும், கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.

'என்னுடைய 50 ஆண்டுகால சட்டசபை வரலாற்றில் 'மாமன் மச்சான்' என யாரையும் அழைத்ததில்லை. அரசியல் எதிரிகளை எதிரியாகத்தான் பார்க்க வேண்டும். சட்டசபைக்குள் 'மாமன் மச்சான்' உறவுமுறை ஏன்? அண்ணன், தம்பி என்றெல்லாம் அரசியலில் அழைப்பது என் கேள்விக்குறியாகவே இருந்துள்ளது' என்று துரைமுருகன் குறிப்பிட்டார்.

மேலும், தன்னை வளர்த்த எம்ஜிஆர், அமைச்சர் பதவி தருவதாக அழைத்தபோதும், திமுகவில் உறுதியாக இருந்ததை எம்ஜிஆர் பாராட்டியதாக அவர் நினைவு கூர்ந்தார். 'அப்பேற்பட்ட எம்ஜிஆரையே சட்டசபையில் நேருக்கு நேர் கேள்வியெழுப்பியவன் நான். எதிர்க்கட்சியினர் வாளுடனும், ஆளுங்கட்சியினர் கேடயத்துடனும் சட்டசபைக்கு வர வேண்டும். ஒருவரையொருவர் எதிர்கொண்டு, தடுக்க முடிந்தால் தடுக்க வேண்டும், இல்லையென்றால் மரியாதையுடன் செல்ல வேண்டும்' என்றும் அவர் விளக்கினார்.

தொடர்ந்து, இனி வரும் நாட்களில் திமுக சட்டசபைக்கு வர முடியாது, வெல்ல முடியாது என தமாகவினர் பேசியது குறித்து கேட்டபோது, 'யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களுக்குப் பின்னால் யாரும் வரமாட்டார்கள் என்றுதான் சொல்வார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோரும் அவ்வாறே கூறினர். அவர்களை வீழ்த்தி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இது ஒரு பெருமைக்காக பேசப்படும் சொல், அரசியல் ஞானத்தோடு சொல்லப்படும் சொல் அல்ல' என்று பதிலளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்த செய்திகள் குறித்து பேசிய துரைமுருகன், 'கார் இல்லாதவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். கார் இல்லை என்று சொன்னவர்களிடமே பல கார்கள் இருப்பதாகவும் செய்திகளில் பார்த்தேன். ஏற்கனவே கார் உள்ளவர்களுக்கு மீண்டும் கார் வழங்குவது தேவையில்லை என்பதே மக்களின் கருத்து. திமுகவைப் பொறுத்தவரை, எங்களிடம் கார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு அது தேவையில்லை' என்றார்.

அமைச்சர் நிர்மல் குமார், 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் திமுகவினர் அரசியலை விட்டு விலகி, அண்ணா அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்' என விமர்சித்தது குறித்து கேட்டபோது, 'இவரைப் போன்ற பலர் இதை முன்பே சொல்லியிருக்கிறார்கள். திமுக முளைத்ததிலிருந்தே எதிர்ப்புகளை சந்தித்து வருகிறது. எங்களை விட்டு சென்ற பலர் மீண்டும் எங்களிடம் வந்துள்ளனர். திமுகவை எதிர்த்து கட்சி நடத்தியவர்கள் அனைவரும் இறுதியில் திமுகவிடமே அடக்கமாகிவிட்டார்கள்' என்று துரைமுருகன் உறுதியாகக் கூறினார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKThuraimuruganஅரசியல்சட்டமன்றம்தமாகதிமுகதுரைமுருகன்நிர்மல் குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய இந்தியாவில் ஆதிவாசிகளின் இழைகள் நூல் பற்றிய செய்தி ஆதிவாசி வரலாறு: எழுதப்படாத பக்கங்கள் யாருடையவை?
Next Article ஓமம் மற்றும் பிற மூலிகைகள் அடங்கிய ஒரு பாத்திரம் ஓமத்தின் அற்புத நன்மைகள்: வயிற்று கோளாறுகளுக்கு உடனடி தீர்வு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர்

இந்திய செய்தி சேனல்கள் மீது அமெரிக்க தூதர் விமர்சனம்

இந்தியாவில் உள்ள சில செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள், நிஜ வாழ்க்கையின் யதார்த்தத்திலிருந்து…

ஆகஸ்ட் 24, 2026

வந்தே மாதரத்தை அவமதிப்பவர்களின் மனநிலையை மாற்றுவோம் – நிதின் நபின்

பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் நபின்,…

ஆகஸ்ட் 24, 2026

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் – முகவரி, செல்போன் எண்கள் வெளியீடு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் காஷ்மீரி பண்டிட்டுகளின் கைப்பேசி…

ஆகஸ்ட் 24, 2026

ராகுல் மனுஸ்மிருதி பேச்சுக்கு யோகி ஆதித்யநாத் கண்டனம்

ராகுல் காந்தி நாட்டின் பாரம்பரியத்தை அழிப்பதாக உத்தரப்…

ஆகஸ்ட் 24, 2026

கர்நாடகாவில் பாஜக ஆர்ப்பாட்டம்: அமைச்சர் நாகேந்திரா பதவி விலக வலியுறுத்தல்

கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி…

ஆகஸ்ட் 24, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தூத்துக்குடியில் இளைஞர் கொடூர கொலை: காவல்துறை விசாரணை

தூத்துக்குடி அம்பேத்கர்நகர் முல்லைநகர் கல்லறைத் தோட்டத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூரில் சிறுவனை கொடூரமாக கொலை செய்து புதைத்த சம்பவம் – பரபரப்பு

திருவள்ளூரில், ஆடுகளை சரியாக மேய்க்காத சிறுவனை அடித்துக்கொன்று புதைத்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் காவலர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார்
தமிழ்நாடு

600க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பதக்கம் வழங்கினார்!

சென்னை: 600க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் சிறப்புப் பதக்கங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கி கௌரவித்தார். சட்டம்-ஒழுங்கு, குற்றத்தடுப்பு, போதைப்பொருள் ஒழிப்பு…

2 Min Read
நக்கீரன் இதழ் ஆசிரியர் ஆர். கோபால்
தமிழ்நாடு

நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு

கரூர் நெரிசல் சம்பவம் குறித்த யூடியூப் விவாதத்தில் கருத்து தெரிவித்ததாக நக்கீரன் கோபால் மீது சைபர் கிரைம் வழக்குப்பதிவு. காவல்துறை விசாரணை தீவிரம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?