திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, சட்டப்பூர்வமாக போராடுவோம் என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க. ஆட்சியின் போது கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறையே தற்போதைய த.வெ.க. ஆட்சியிலும் தொடரும் என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும், முருக பக்தர்களுக்கு எதிரான அடக்குமுறை என்றும் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டினார். நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் அங்கு தீபம் ஏற்ற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சியிலும் அதே அணுகுமுறை தொடரும் என அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளதன் மூலம், ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியை த.வெ.க. மறைமுகமாக நடத்துகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். அமைச்சரின் இந்த கருத்து முருக பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ஆண்டு தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்பூர்வமான வழியில் பெற, ஜனநாயக முறையில் போராடி வருகிறோம் என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.