MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: டாஸ்மாக் ஊழியர் ஊதிய உயர்வு: சம்மேளனம் அதிருப்தி!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: டாஸ்மாக் ஊழியர் ஊதிய உயர்வு: சம்மேளனம் அதிருப்தி!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - டாஸ்மாக் ஊழியர் ஊதிய உயர்வு: சம்மேளனம் அதிருப்தி!

தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர் ஊதிய உயர்வு: சம்மேளனம் அதிருப்தி!

Admin
Last updated: ஜூலை 8, 2026 7:41 காலை
Admin
Share
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன அறிக்கையை வெளியிடும் காட்சி
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம்
SHARE

டாஸ்மாக் ஊழியர்களின் 25% ஊதிய உயர்வு அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் கடை ஊழியர்களின் ஊதியத்தில் 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று அறிவித்தார். ஒரே நேரத்தில் இந்த அளவிற்கான ஊழிய உயர்வு என்பது டாஸ்மாக் வரலாற்றிலேயே முதன்முறை என்றும், இதன் மூலம் ஊழியர்களுக்கு மாதம் கூடுதலாக ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை ஊதியம் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், இந்த தொகுப்பூதிய அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாகவும், அரசு தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏற்புடையதல்ல என்றும் சம்மேளனம் கூறியுள்ளது. ஊழியர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 23 ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்ற பெயரில் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், ஆவின் பாலகன்கள், நியாய விலை கடைகள் போன்ற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியுடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. அரசு தனது சொந்த நிறுவன ஊழியர்களிடம் இந்த பாகுபாடு காட்டுவது சரியல்ல என முந்தைய ஆட்சிக் காலங்களிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதைய திமுக அரசும், முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தொகுப்பூதியத்தில் அவ்வப்போது சில உயர்வுகளை அறிவித்து, நவீன கொத்தடிமை முறையைத் தொடர்வதாக சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஊழியர்களின் வாழ்க்கைச் செலவினங்களை ஈடுசெய்ய உதவாது என்றும், இது ஊழியர்களைக் கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சரின் பேச்சில், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகவே ஊதிய உயர்வு அமைந்துள்ளதாகத் தெரிகிறது. அரசின் இதர நிறுவனங்களில் 23 ஆண்டு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இதர பணப்பயன்கள் பெற்று வருவதைக் கருத்தில் கொள்ளாமல், இந்த அரசும் பழைய முறையையே பின்பற்றுவது ஏற்புடையதல்ல என கடும் விமர்சனத்தை சம்மேளனம் முன்வைத்துள்ளது.

எனவே, அரசு இந்த தொகுப்பூதிய உயர்வினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை சம்பளத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்றும், இதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKEmployeeSalary HikeTamil Nadu GovernmentTasmacVigneshஊதிய உயர்வுஊழியர்டாஸ்மாக்தமிழக அரசுதிமுகவிக்னேஷ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குஜராத் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் குஜராத் குண்டுவெடிப்பு: 38 பேருக்கு தூக்கு தண்டனை உறுதி!
Next Article வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது. 300 கோடி…

ஜூலை 8, 2026

இந்தியாவில் 1.6 லட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா நிறுவனம்

இந்தியாவில் சட்டவிரோத மற்றும் தவறான தகவல்களைப் பரப்பும்…

ஜூலை 8, 2026

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மேகதாது அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திருமாவளவன் வலியுறுத்தல்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றம்…

2 Min Read
தமிழ்நாடு

பள்ளி அடையாள அட்டையில் சாதிப் பெயர் இடம்பெறாது – அமைச்சர் நிர்மல்குமார்

பள்ளிக்கூட அடையாள அட்டைகளில் இனி சாதிப் பெயர்கள் இடம்பெறாது என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சேகர்பாபு மீது திமுக கள ஆய்வுக்குழு குற்றச்சாட்டு – ஸ்டாலின் கடும் கோபம்

திமுக கள ஆய்வுக்குழு அறிக்கையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் முதல்வர் ஸ்டாலின் கடும் கோபத்தில் உள்ளதாகத் தகவல்.

1 Min Read
மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற திடக்கழிவு மேலாண்மை ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு

திடக்கழிவு மேலாண்மை: பதிவு செய்ய 15 நாட்கள் அவகாசம்

திடக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக, மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தகுதியுடைய பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?