தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழை! முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (மே 24) பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, கோவை, சேலம், வேலூர், திருச்சி, மதுரை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதே இதற்குக் காரணம்.

இந்த வளிமண்டல சுழற்சியின் காரணமாக, தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினமும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வருகின்ற மே 26 முதல் 29-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். இந்த மழையின் போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மேலும், மே 26-ம் தேதி அன்று கோவை, திருப்பூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் (மே 24 முதல் 27 வரை) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வழக்கத்தை விட வெப்பநிலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 86 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகவும் பதிவாகக்கூடும். நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாலுமுக்கு, ஊத்து (திருநெல்வேலி), போளூர் (திருவண்ணாமலை) ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் பெய்யும் தெரியுமா?

தென்மேற்கு பருவமழை வருகிற 16 ஆம் தேதி தெற்கு வங்கக்கடல், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அந்தமான், நிகோபார் தீவுகளில் துவங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, வடக்கு தமிழகம், ராயலசீமா மற்றும் வடக்கு உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நீண்டு காணப்படுகிறது.

இன்று (ஜூன் 15) தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கோவை மலைப்பகுதிகள், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், தேனி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (ஜூன் 16) முதல் வரும் 20 ஆம் தேதி வரை, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை தொடரும். கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version