ஆளுநர் மாளிகை அதிரடி: பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு – முக்கிய காரணம் இதுதான்!

பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 10-லிருந்து 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய போர் பதற்றம் காரணமாக, பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையேற்று, முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்லும்போதும் 10 காவல்துறை பாதுகாப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இது குறித்த அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி விடுத்த 7 முக்கிய வேண்டுகோள்களில் ஒன்றான 'பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்' என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில், பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிக்கன நடவடிக்கையானது, பொதுமக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்து, பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கும் பங்களிக்கும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version