சாலைகள், குடிநீர் வசதி மேம்பாடு: நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை

இன்று காலை சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தனது முதல் உரையை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

இந்த சூழ்நிலையில், தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தற்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சாலைகள், குடிநீர் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்துவது குறித்த இந்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்று வருகிறது.

துறையின் செயல்பாடுகள் மற்றும் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த விஜய், அவர்களுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக, மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கோயில்களுக்கு அருகில் உள்ள 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் நேற்று உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version