தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் சூர்யா, 'கருப்பு' திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றிப் படத்துடன் திரையுலகில் கம்பேக் கொடுத்துள்ளார். கடந்த 15-ம் தேதி வெளியான இந்தப் படம், சூர்யாவின் திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த கமர்ஷியல் வெற்றியாக அமைந்துள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த 'கருப்பு' திரைப்படம், சில நிதிச் சிக்கல்களால் முதலில் வெளியாக தாமதமானாலும், தற்போது திரையரங்குகளில் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
'கருப்பு' திரைப்படம் முதல் நாளில் மட்டும் சுமார் ₹20.66 கோடி வசூலித்து, ஒரு வலுவான தொடக்கத்தைப் பெற்றது. இரண்டாம் நாளில் வசூல் ₹38 கோடியாக உயர்ந்தது. நேற்றோடு மூன்று நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் இதுவரை சுமார் ₹120.75 கோடியை வசூலித்து, பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மட்டும் ₹78 கோடி வசூலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சூர்யா மற்றும் திரிஷா ஜோடி, 'கருப்பு' படத்தின் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ஆறு படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்த நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்களின் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நீதிமன்ற வழக்குகள், தந்தை-மகள் பாசப் போராட்டம், மற்றும் தெய்வீக நம்பிக்கை ஆகியவற்றை மையமாகக் கொண்டு 'கருப்பு' திரைப்படம் ஒரு உணர்ச்சிகரமான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. படத்தின் கதைக்களம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

