வங்கி சாரா நிதி நிறுவனமான சுந்தரம் ஃபைனான்ஸ், நடப்பு நிதியாண்டில் (2025-26) மார்ச் 31 நிலவரப்படி ரூ.1,834 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் லாபத்தை விட 19% அதிகமாகும். நிறுவனத்தின் கடன் வழங்கல் மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்ததே இந்த லாப வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் வழங்கல் 14% அதிகரித்து ரூ.32,321 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, 2026 மார்ச் இறுதி நிலவரப்படி, நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்து மதிப்பு 16% உயர்ந்து ரூ.59,908 கோடியாக அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் நிகர வட்டி வருவாய் கடந்த நிதியாண்டில் 21% அதிகரித்து ரூ.3,376 கோடியாக உயர்ந்துள்ளது. நான்காவது காலாண்டில் மட்டும், இந்த வருவாய் 20% உயர்ந்து ரூ.901 கோடியாக பதிவாகியுள்ளது.
மேலும், நிறுவனத்தின் இயக்குநர் குழு, பங்குதாரர்களுக்கு 240% இறுதி டிவிடெண்டாக பங்கு ஒன்றுக்கு ரூ.24 வழங்க பரிந்துரை செய்துள்ளது என்றும் சுந்தரம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.
