MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பள்ளிக்கு பைக் வந்தால் பறிமுதல்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பள்ளிக்கு பைக் வந்தால் பறிமுதல்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - பள்ளிக்கு பைக் வந்தால் பறிமுதல்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

அரசியல்

பள்ளிக்கு பைக் வந்தால் பறிமுதல்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

Admin
Last updated: மே 27, 2026 11:26 காலை
Admin
Share
SHARE

பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் பள்ளிக்கு வந்தால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகத்தின் வலியுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பு மன்றம் அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்தப்பட்டு, உடற்கல்வி ஆசிரியர்கள் அதன் தலைவராக செயல்பட வேண்டும். தினமும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த கருத்துகள் பகிரப்பட வேண்டும். என்.சி.சி, என்.எஸ்.எஸ், சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சாலை விதிகள் குறித்த பயிற்சிகள் பெறவும், போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பேரணிகள் மற்றும் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வந்தால், வாகனத்தை பறிமுதல் செய்து, பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கி அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிக்கு வெளியே மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதை தடுக்க தேவையான அறிவுரைகளை காலை வணக்கக் கூட்டத்தில் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:சாலை பாதுகாப்புபள்ளிக்கல்வித்துறைபறிமுதல்பைக்மாணவர்கள்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மத்திய அரசு வேலை: 12,256 பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி அறிவிப்பு
Next Article வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் மற்றும் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு

கேரளாவிற்கு விலக்கு: கட்டுமானப் பொருட்கள் விவகாரத்தில் விஜய் உறுதி

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதில் உள்ள கட்டுப்பாடுகளில் இருந்து…

ஆகஸ்ட் 21, 2026

டெல்லி பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்புகள்…

ஆகஸ்ட் 21, 2026

கருத்து வேறுபாடுகள் சித்ரவதை ஆகாது: விவாகரத்து மனு தள்ளுபடி

கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் மனரீதியான…

ஆகஸ்ட் 21, 2026

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

காஷ்மீரின் செனாப் ரயில் பாலத்தில் மணிக்கு 100…

ஆகஸ்ட் 21, 2026

வந்தே மாதரம் பாடல் விவகாரம்: காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றச்சாட்டு

வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளை…

ஆகஸ்ட் 21, 2026

You Might Also Like

அரசியல்

தமிழகத்தில் மூன்று மொழிக் கொள்கையை திணிக்கக் கூடாது – ராமதாஸ்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் மூன்று மொழிகள் கட்டாயம் என்ற அறிவிப்பு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் இருமொழிக் கொள்கையை மதித்து, மாநில உரிமைகளை பாதுகாக்க…

1 Min Read
அரசியல்

லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி-யாக அருண் ஐபிஎஸ் நியமனம்

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி-யாக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் விஜய் உத்தரவின் பேரில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

1 Min Read
காஞ்சிபுரத்தில் மின்வெட்டு காரணமாக விடுமுறை அளிக்கப்பட்ட பள்ளி
தமிழ்நாடு

மின்வெட்டால் பள்ளிக்கு விடுமுறை: மாணவர்கள் ஏமாற்றம்

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் மின்வெட்டு காரணமாக தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின்னரே விடுமுறை அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர்.

2 Min Read
திருத்தணி பள்ளியில் வகுப்பறையில் இருந்து மீட்கப்பட்ட சாரைப்பாம்பு
தமிழ்நாடு

திருத்தணியில் பள்ளி வகுப்பறையில் 7 அடி சாரைப்பாம்பு: மாணவர்கள் அச்சத்தில் ஓட்டம்

திருத்தணி பள்ளியில் 7 அடி சாரைப்பாம்பு வகுப்பறை மேஜை அடியில் பதுங்கியதால் மாணவர்கள் அச்சத்தில் ஓட்டம். தீயணைப்புத் துறையினர் பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?