தமிழக அரசியலில் நிலவி வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருடன் கிண்டியில் உள்ள லோக் பவனில் ஆளுநர் ஆர்லெகரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த திடீர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வரும் நிலையில், இந்த அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் சபாநாயகரின் இந்த ஆளுநர் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு அமைந்துள்ள நிலையில், இந்த புதிய அரசின் முதல் பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த ஆளுநர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா விவகாரங்கள் மற்றும் வரவிருக்கும் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடருக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் ஆளுநருடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.