வீடுகளுக்கு சூரிய மின்சக்தி: ரூ. 1 லட்சம் வரை மானியம் அறிவிப்பு!

வீடுகளுக்கு சூரிய மின்சக்தி திட்டங்கள் அமைக்க ரூ. 1 லட்சம் வரை மானியம்.

தமிழகத்தில் வீடுகளில் சூரிய மின்சக்தி திட்டங்களை அமைப்பதற்கு ஒரு லட்ச ரூபாய் வரை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சுமார் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மின் விநியோகத்தை சீரமைக்கும் நோக்கில், கோயம்புத்தூர் – அரியலூர் இடையே புதிய மின்வழித் தடம் தனியார் பங்களிப்புடன் சுமார் 700 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், விருதுநகர் – கோயம்புத்தூர் இடையேயான மின் பகிர்மான திட்டமும் விரைவுபடுத்தப்படும். இதற்காக 1543 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நுகர்வோருக்கு வழங்கப்படும் 200 யூனிட் இலவச மின்சாரத்திற்காக இந்த பட்ஜெட்டில் 1,541 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எரிசக்தி துறைக்கு மொத்தமாக 15,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீட்டு வசதித் துறை சார்பில், அனைவருக்கும் தரமான வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு 1243 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் 1 லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 'மை ஹோம்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு மொத்தம் 8,852 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், அமைச்சர் மரியவில்சன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். புரட்சித் தலைவருக்குப் பிறகு மீனவர்களின் நண்பனாக நமது முதலமைச்சர் விஜய் திகழ்கிறார் என்று அவர் குறிப்பிட்டார். மீனவர்களுக்கான மீன்பிடி உதவித் தொகையை தற்போதுள்ள 6000 ரூபாயிலிருந்து 7000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், இதற்காக 139 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கால்நடை மற்றும் மீன்வளத்துறைக்கு சேர்த்து மொத்தம் 4880 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version