நடிகர் பாவா லட்சுமணனுக்கு அமைச்சர் ராஜ்மோகன் செய்த உதவி!

“அந்த மனசு தான் சார் கடவுள்”- அமைச்சர் ராஜ்மோகன் செய்த நெகிழ்ச்சி செயல்.

நடிகர் பாவா லட்சுமணனுக்கு தனது எம்.எல்.ஏ குடியிருப்பில் தங்குவதற்கு இடம் கொடுத்துள்ளார் அமைச்சர் ராஜ்மோகன். நடிகர் பாவா லட்சுமணன் குடியிருக்க வீடு இல்லாமல் தவித்து வந்த நிலையில், இதுகுறித்து அறிந்த அமைச்சர் ராஜ்மோகன் உடனடியாக அவரை நேரில் சந்தித்தார்.

அமைச்சரின் செயல்பாடு: இன்று (2.6.2026) நடிகர் பாவா லட்சுமணனை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், 'நீங்கள் எனது எம்.எல்.ஏ குடியிருப்பில் வந்து குடியிருங்கள். உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்து தருகிறேன்' என்று கூறினார்.

மேலும், 'இன்னும் ஆறு மாதங்களுக்கு இங்கு தங்கிக் கொள்ளுங்கள். அதற்குள் உங்களுக்கு சொந்தமாக வீடு ஒன்றை ஏற்பாடு செய்து தருகிறேன்' என்றும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதியளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை நடிகர் பாபா லட்சுமணன் எம்.எல்.ஏ குடியிருப்பில் குடியேறினார்.

இந்த மனிதநேயச் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒரு அமைச்சர், நடிகர் ஒருவரின் துயரத்தில் பங்கெடுத்து, அவருக்கு அடைக்கலம் கொடுத்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version