தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றியடைந்து தவெக கட்சி பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது
காங்கிரசின் 5 எம்எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் விஜய்.
ஆளுநர் அர்லேகர், 118 எம்எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசி.க ஆகிய கட்சிகளின் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்தால், எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 118 ஆக உயரும்.
ஆனால், 117 எம்எல்.ஏக்கள் மட்டும் கிடைக்கும் நிலை ஏற்படும் என்பதால், மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு தேவைப்படுகிறது.
அதிமுக, யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்காதது குறிப்பிடத்தக்கது
பாம.க, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேமுதிக ஆகிய கட்சிகளில் இருந்து ஒரு எம்.எல்.ஏ ஆதரவு கிடைத்தால், விஜய் ஆட்சி அமைக்க முடியும்.
இதனால், அந்த ஒரு எம்எல்.ஏ யார் என்பதே தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.