தமிழக சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய், தனது அமைச்சரவை சகாக்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் 9 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அவர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார். துறைகளின் செயல்பாடுகள் மற்றும் அரசின் எதிர்பார்ப்புகள் குறித்து அவர் அமைச்சர்களுக்கு விளக்கினார்.
முதல்-அமைச்சருடனான ஆலோசனையைத் தொடர்ந்து, அமைச்சர்கள் அவரவர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அடுத்தகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டனர். அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.
இந்த சூழலில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதல்வர் விஜய் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். பள்ளிக்கல்வித்துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் அமைச்சர் விரிவாக விவாதித்து வருகிறார்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பள்ளிகள் திறப்பு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாளை மறுநாள் வெளியாக உள்ள 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.