MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!

தமிழ்நாடு

கை விலங்குடன் தப்பிய ரவுடி: காதலி மூலம் சினிமா பாணியில் பிடித்த போலீஸ்!

Admin
Last updated: மே 14, 2026 8:20 காலை
Admin
Share
SHARE

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பித்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அபிஷேக்கை, அவரது காதலியை வைத்து சினிமா பாணியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (19 வயது) மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா கடத்தல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 11 ஆம் தேதி காசிமேடு பகுதியில் சுற்றித்திரிந்தபோது தனிப்படை போலீசாரால் பிடிக்கப்பட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அப்போது, போலீசார் சற்று அசந்த நேரத்தில், கை விலங்குடன் தப்பித்து தலைமறைவானார்.

தப்பித்த அபிஷேக், விம்கோ நகரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி, அங்கிருந்து ஒரு பையையும், செல்போனையும் பெற்றுக்கொண்டு கோயம்பேடு வழியாக புதுச்சேரிக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. தனிப்படை போலீசார், அபிஷேக் பயன்படுத்திய செல்போனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, அவர் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த தனது கள்ளக்காதலியுடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணின் உதவியுடன் அபிஷேக்கை தொடர்புகொண்டு, உடனடியாக சென்னைக்கு வருமாறு அழைத்துள்ளனர். காதலி மீதுள்ள நம்பிக்கையில், புதுச்சேரியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அபிஷேக் வந்துள்ளார். அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார், பேருந்தில் இருந்து இறங்கிய அபிஷேக்கை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்தில் இருந்து கை விலங்குடன் தப்பித்த ரவுடியை, காதலி மூலம் சினிமா பாணியில் போலீசார் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:arrestChennaicrimepoliceTamil Nadu
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தைக் காக்கும் வலிமை நமக்கே! – ஸ்டாலின் உறுதி
Next Article குதிரை பேரத்தில் விஜய் ஈடுபடவில்லை – வைகோ கருத்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

முதலமைச்சர் விஜய் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும் காட்சி

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில் முதலமைச்சர் விஜய் இரண்டு முறை…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சேவைக்காகவே அரசியல்: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

அரசியல் என்பது மக்களுக்கான சேவைக்கானது என்றும், தேர்தல் வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொள்ளக்கூடாது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். மக்கள் நல முகாம் மூலம்…

1 Min Read
தமிழ்நாடு

சமூகநீதிக்கு எதிராக தவெக அரசு செயல்படுகிறது: நயினார் நாகேந்திரன்

தவெக அரசு முஸ்லீம் இட ஒதுக்கீட்டை உயர்த்துவது சமூகநீதிக்கு எதிரானது என்றும், இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

விஜய் – ராகுல் காந்தி.. காங்கிரஸ் வெளியிட்ட ஏஐ வீடியோ!

சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் மட்டுமே வென்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. அப்போது திமுக கூட்டணியில் 5 இடம் வென்ற காங்கிரஸ் தவெகவுக்கு தாவியது. மேலும்…

1 Min Read
தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு எஸ்டிபிஐ கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?